Monday, November 28, 2016

அல்-குவைதா தொடர்புடைய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அல் - குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட, நான்கு பேர், மதுரையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.


விஸ்வரூபம் படம் வரும்பொழுது, கமலஹாசனுக்கு எதிராக பொங்கியர்கள் எல்லாம் எங்கே? மூடிகொண்டு படுத்துவிட்டார்கள்.


இப்படி ஒரு சாத்தியம் இருப்பது யாருக்கு தெரியாது? ரோஜாவில் மணிரத்னம் அதனைத்தான் சொன்னார், உடனே பம்பாய் படத்து மனீஷாவிற்காக குண்டு வீசினார்கள்.




விஸ்வரூபத்தில் கமல் அப்படி சொன்னார் என வரிந்து கட்டி அவரை பாடாய் படுத்தினார்கள்


இப்பொழுது என்ன செய்வார்கள்? யூகிக்கலாம்


இந்துத்வா மோடி அரசு தேசிய புலனாய்வு துறையினை ஏவிவிட்டு இஸ்லாமியரை கொடுமைபடுத்துகின்றது என கிளம்பலாம்


இது உலகளாவிய பிரச்சினை, இவர்களை கைகாட்டி கொண்டிருப்பது உலகின் பெரும் கைகள். இலங்கை, வங்கதேசம் போன்று இந்தியாவிலும் கைது நடக்கின்றது, அவ்வளவுதான்.


அன்று கமலஹாசனின் விஸ்வரூபத்தை நாங்கள் பார்க்காமல் விடமாட்டோம் என எப்படி களபேரம் செய்து ஏதோ டைரக்டர் போல காட்சிகளை மாற்ற சொன்னார்கள்?


இப்பொழுது அவர்களை, அதாவது அந்த போராட்டகாரர்களை சந்திக்காமல் விடமாட்டோம் என கமல் ரசிகர்கள் கிளம்பினால் எப்படி இருக்கும்?


எப்படியோ கமலஹாசன் புன்னகைக்கும் நேரம் இது.



No comments:

Post a Comment