Thursday, November 24, 2016

சிறையில் நளினி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார்




சிறையில் நளினி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார் என ஏக அலப்பறைகள், அதில் முருகன் வெளிநாடு செல்ல இந்தியா வந்ததாகவும், சிவராசனை ஒரு ஏஜன்ட் என்ற முறையில் சந்தித்ததாகவும், இன்னும் ஏராளமான பொய்மூட்டைகளை அவிழ்த்திருக்கின்றார்


இன்னொரு இடத்தில் பேரரிவாளனை காப்பாற்ற இவர் சொல்லியிருக்கும் ஒரு பொய், இவரது புத்தகத்தை அப்படியே தூக்கி தூர எறிய வைக்கின்றது


அதாவது பேரரிவாளனும் புகைப்பட கலைஞனாம், அவனும் ஹரிபாபு போலவே குற்றமில்லாதவனாம், இதில்தான் வசமாக சிக்குகின்றார் நளினி





பேரரிவாளன் சிறுவயது முதல் புலி தொடர்பு உள்ளவர் என்பதும், யாழ்பாணம் சென்று அவர் புலிகளுடன் நேரடியாக பழகியவர் என்பதும் ரகசியம் அல்ல, நிரூபிக்கபட்ட விஷயம்

செத்துபோன ஹரிபாபு காரியம் முடிந்தவுடன் யாழ்பாணம் தப்ப இருந்ததும், அவன் 6 மாத காலம் புலிகளுடன் தொடர்பில் இருந்ததும் அவன் காதலி சுந்தரி என்பவள் எழுதிய கடிதங்களிலே தெரிகின்றது, அவள் எச்சரித்த வரிகள் ஹரிபாபுவிற்கும் புலிகளுக்கும் இருந்த தொடர்பினை நிருபிக்கின்றன‌

புலிகள் செய்த பெரும் பிழை ராஜிவ் கொலையினை படம் எடுத்தது, அதுதான் மறுநாள் எல்லா பத்திரிகையிலும் வருமே என்ற அடிப்படை அறிவு இருந்தது பின் எதற்கு படமெடுத்தார்கள்?

எல்லா குண்டுவெடிப்புகளையும் படமெடுத்து அது வெடித்த சக்தி என்ன? எத்தனை பேர் செத்தார்கள்? எப்படி எல்லாம் சிதறி செத்தார்கள் என ரசிப்பதில் புலிகளின் ஆனந்தம் அப்படி

(கிட்டதட்ட 10,000 புகைபடங்களை அப்படி பிரபாகரனின் மறைவிடத்திலிருந்து கைபற்றியதாக சிங்கள தளபதி சமீபத்தில் சொன்னது நினைவிருக்கலாம்)

அப்படி ஒரு கொடூரமான ரசனை புலிகளிடம் இருந்திருக்கின்றது

பாதுகாப்பான தூரத்தில் படமெடுத்த ஹரிபாபு, கூட்ட நெரிசலில் முன் தள்ளபட்டு இறந்தான்.

ஆக ஹரிபாபு அப்பாவி, பேரரிவாளன் அப்பாவி என புலம்புகின்றார் நளினி

இன்னொரு விஷயம் நளினி மேலான நம்பக தன்மையினை அப்படியே உடைக்கின்றது

கைதான பின்புதான் அவர் கர்ப்பமானது உறுதிபடுத்தபட்டது. ஒரு சிறிய அதிர்வோ, அல்லது மெல்லிய தாக்குதலோ கூட அக் கருவினை கலைய செய்யும் என்பது தெரியாததல்ல‌

ஆனால் பத்துமாதம் அவளை சிறையில் பராமரித்திருக்கின்றார்கள், விசாரணை நடந்தாலும் வேளா வேளைக்கு மருத்துவ சோதனை எல்லாம் செய்து அவள் சுகமாக குழந்தையும் பெற்று அதுவும் கொஞ்சநாள் சிறையிலே வளர்ந்திருக்கின்றது

கவனியுங்கள் இவர் எழுதியிருப்பது போல சித்திரவதை , கண்ணீர் அடி உதை என்றால் கர்ப்பம் தங்கி இருக்குமா?

இன்னொன்று தாய் அழுதுகொண்டே இருந்தால் கர்பத்து குழந்தை மனபாதிப்புடனோ அல்லது வளரும் போது தாய் அடிவாங்குவதை பார்த்து வளர்ந்தால் ஒரு மாதிரி மன கிலேசத்தில் வளரும் என்பது இயற்கை

ஆனால் நளினி மகள் இதோ மருத்துவராகி இருக்கின்றார்...  எப்படி?

சிறையில் மிக நல்லமுறையிலேதான் நளினியினை கவனித்திருக்கின்றார்கள் இல்லை என்றால் இதெல்லாம் எப்படி சாத்தியம்?

ஆக பல விஷயங்களை மறைக்கின்றார் நளினி

இன்னும் யாரையோ நம்பி பொய்மேல் பொய் சொல்லிகொண்டிருந்தால் தன் தலையிலே மண் அள்ளிபோடுகின்றார் என்றே அர்த்தம்.







 கொசுறு


கறுப்புப் பணத்திற்கு காரணமானவர்கள்  நிம்மதியாக இருக்கிறார்கள் : மு.க ஸ்டாலின்






இவரின் நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு செல்லாத கலைஞரின் குடும்பத்தாரையும் கட்சி நிர்வாகிகளையும் வேறு எப்படித்தான் கண்டிப்பது?










No comments:

Post a Comment