Thursday, November 10, 2016

ஈழ போராட்டத்தின் வரலாறையே மாற்றிபோடும் விஷயங்கள்

ஈழபோராட்டத்தின் வரலாறையே மாற்றிபோடும் பல விஷயங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன, அதிலொன்று பிரபாகரன் சிங்கள அரசோடு செய்த பெரும் ராஜதந்திரம் எனும் துரோகம்


முன்பு அமைதிபடையுடன் மோத சிங்களனோடு கை கோர்த்தது போல, பின்பும் கருணாவினை அழிக்க சந்திரிகாவோடு கை கோர்த்திருக்கின்றார் என்கின்றார்கள்.


எதற்காக செய்தார்? கருணாவிற்கா


கருணா என்ன சொன்னான், சண்டை முடிவில்லாதாக போகிறது, இந்தியா இனி சமாதானத்திற்கு வராது, அதனை மீறி உலகநாடுகளும் வராது, இன்னொன்று சாவதற்கு கிழக்கு மக்கள், வாழ்வதற்கு வடக்கு மாகாணமக்களா என்றதுதான் பிரச்சினை


தளபதிகளுக்குள்ளும் மோதல் முற்றிற்று.


குட்டிசாத்தானுக்கு வேலை கொடுக்காவிட்டால் மந்திரவாதியினை கொல்லுமாம், அப்படி தளபதிகள் போரில் இல்லாவிட்டால் தங்களுக்குள் மோதி இயக்கத்தை அழிப்பார்கள் என அஞ்சினார் பிரபாரகன்


யுத்தம் தொடங்க அவர் விரும்பினார் பிரபாகரன்.


பின் இருந்து கொன்றுவிடுவார்கள் என கருணா கலங்கினார்.


எப்படியோ கருணா அணி பிரிந்தது, மோதி மொத்தமாய் அழித்துவிட புலிகளும் துணிந்தனர்.


இந்த உட்கட்சி சண்டை சிங்களனுக்கு முதலில் தெரியாது


கருணா பெரும் யுத்த தளபதி, தந்திரமாக சிங்கள முகாமுற்கு முன் தன் முகாமை அமைத்தான், அதாவது புலிகள் பின்னிருந்து வரமுடியாது, சிங்கள படைகளை கடந்து வரமுடியாது என்பது அவன் யுத்த வியூகம்


பிரபாகரனின் தந்திர மூளை வேறு மாதிரி சிந்தித்தது, சிங்களனிடம் தகவல் சொல்லி, தாங்கள் கருணாவினை ஒழிக்க போவதாகவும், சிங்கள ஆர்மி வழிவிடும்படியும் கோரிக்கை விடுத்தார்.


சிங்கள மூளை நரிதந்திரமாக திட்டமிட்டது, சரி உதவுகின்றோம் அதோடு கிழக்கு மாவட்டம் முழுவதும் புலி ஆதிக்கம் விரட்டபட்டு சிங்கள ராணுவ கட்டுபாடாக்க ஒத்துழைக்கவேண்டும் என்றது


கருணாவினை கொல்லவேண்டும் என்ற வெறியில் புலிகள் ஒப்புகொண்டனர், இன்னொன்று கருணாவினை கொன்றால் கிழக்கு மாகாண மக்களின் கோபம் புலிகள் மீது பாயும், அதனை கட்டுபடுத்தமுடியாது, பதிலாக சிங்களனே எடுத்துகொள்ளட்டும் என விட்டுவிட்டனர்.


இந்த தந்திரத்தில் சிங்களபடை வழிவிட புலிகள் கருணா மோதலில் கருணா படை தோற்றது, தோற்றால் என்ன செய்யவேண்டும் என முன்பே யூகிப்பவந்தான் அறிவாளி


கருணா அதனை செய்தான், புலிகளுக்கும் சிங்களனுக்கும் பொது எதிரியான ஒரு நாட்டிடம் சரணடைந்து தப்பினான்


கருணாவினை பழிவாங்க கிழக்கு மாகாணத்தை இழந்தனர் புலிகள், அதன் பின் தன்னை அங்கு நிலைநிறுத்திய ராணுவம் எளிதாக புலிகளை போட்டு தள்ளியது


மொத்தத்தில் புலிகள் அழிய காரணம் அவர்களின் வடக்கு ஆதிக்க மனோபாவமும், கிழக்கு மக்களை இரண்டாம் நிலை மக்களாக கருதிய எண்ணமுமே


கருணா தலமையில் கிழக்கு மக்கள் ஒதுங்கியபின் புலிகள் ஒரு தாக்குதலை கூட உருப்படியாக செய்யவில்லை என்பது இறுதி யுத்தத்தில் தெரிந்தது.


கேபியினை விரட்டிவிட்டு கேஸ்ட்ரோ எனும் மணிவண்ணனை ஆயுத பொறுப்புக்கு நியமித்த பின் ஒரு தோட்டா கூட ஈழம் வரவில்லை, திறமை அப்படி


கோதபாயா சந்தேகத்திற்குரிய சிங்கள ராணுவத்தினரை வீட்டுக்கு அனுப்பியபின் ஒரு தற்கொலை தாக்குதலையும் புலிகளால் கொழும்பில் நடத்தமுடியவில்லை


அதாவது அவர்களின் வீரம் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதில் இருந்திருக்கின்றது, அந்த பணத்தின் பெயர் ராஜதந்திரம் என்பார்கள்.


ஆக மொத்தத்தில் உட்கட்சி மோதலால் அழிந்த இயக்கம் அது, சிங்களனின் மிக தெளிவான தந்திரமான அணுகுமுறையும் புலிகளை அழித்தது.


எல்லா இயக்கங்களையும் அழித்து, இந்தியாவினையும் ஈழ மக்களிடமிருந்து பிரித்த புலிகள் பின் தாங்களும் பிரிந்து சண்டையிட்டு அழிந்து மடிந்திருக்கின்றனர், இதுதான் சுருக்கம்


இப்படி ஏராளமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன‌


இங்கு காங்கிரசும் கலைஞரும் புலிகளை ஒழித்தனர் என சொல்லிகொண்டு, கிழக்கு மாகாணத்தை சிங்களனுக்கே விட்டுகொடுத்த பிரபாகரன் படத்தை பிடித்துகொண்டு வாய்கிழிய பேசும் அங்கிள் சைமனுக்காக இவற்றை சமர்பிக்கின்றோம்

No comments:

Post a Comment