"என் தந்தை விதவைகளுக்கு பென்சன் கொடுக்கின்றார், இந்திரா காந்தி வந்தால் அவருக்கும் கொடுப்பார்" என சொன்னவர்தான் மு.க ஸ்டாலின்
(கலைஞர் அரசின் விதவைகள் உதவி திட்டம் திருக்குவளை மாமன்னர் முத்துவேலரின் பெரும் சொத்துக்கள் மூலம் செய்யபடுவதல்லவா? அதனால் சொல்லிவிட்டார்)
நிச்சயமாக சொந்த வரிகள் அல்ல, மாறாக யாரோ நாக்கில் எழுதிவிட்ட வரிகள்
அந்த வரிகள்தான் மிசா காலத்தின் பொழுது பாய்ந்தனவே தவிர, மிசாவினை எதிர்த்து அவர் போராடி அல்ல
இளமைக்கால கலைஞர் போராட்டம் பெரிது, அவர் களமிறங்கிய காலங்களில் அதன் வீரியம் மகத்தானது,
ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அவரின் போராட்ட வீரியம் குறைந்தது, ஏதோ சமாளிக்க தொடங்கினார். மிசாவினையும் அப்படி ஒரு தற்காப்பாகத்தான் போராடினார், 1960களின் கலைஞராக அல்ல
ஆனால், மிசா காலத்தில் எத்தனையோ திமுகவினர் போராடினார்கள், உயிர்விட்டார்கள்
வைகோ இன்றுவரை காங்கிரசை வெறுப்பாக பார்ப்பதெல்லாம் அதன் தொடர்ச்சியே
ஆனால் ஸ்டாலின் மட்டும்தான் போராடியது போலவும், அதனால் திமுகவிற்கு அடுத்த தலைவர் அவரே எனவும் சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள், சொல்லட்டும்
மிசா இறுக, கலைஞர் என்ன செய்தார்? காமராஜரை சந்தித்து நீங்கள் வழிகாட்டுங்கள் நாங்கள் பின் வருகின்றோம் என்றார்.
அதாவது இந்தி எதிர்ப்பு, கல்லக்குடி, நோசென்ஸ் என ஏக அழிச்சாட்டியங்களை செய்த கலைஞர், மிசாவினை எதிர்க்க மட்டும் காமராஜர் முன் சென்று ஒன்றுமே தெரியாதவர் போல நின்றார்
காமராஜர் அந்த தந்திரத்தில் சிக்கவில்லை, நீங்களே போராடுங்கள் என சொல்லிவிட்டார்
பின்னர் காமராஜரிடம் கேட்டார்கள், நீங்கள் ஏன் செல்லவில்லை? அவர் சொன்னார்
"என் மேல இன்னும் இவனுக சுமத்தாதது கொலைபழி ஒண்ணுதான்னேன், என்ன போராட சொல்லிட்டு இவனுக 10 பேரை கொளுத்துவாண்ணேன்
காமராஜ் போராட்டம் நடத்தி 10 பேர் செத்தாண்ணு இவனுகளே எழுதுவாண்ணேன், அதான் ஒதுங்கிட்டேண்ணேண்.."
இப்படி மிசாவிற்கு அஞ்சி காமராஜர் பின்னால் ஒளிய பார்த்து , அவரும் ஒதுங்கிய பின் சிறைக்கு சென்றவர்களை எல்லாம்
ஏதோ பெரும் போராளி போல பேசிகொண்டிருக்கின்றார்கள்
இந்திரா பற்றி சொல்லகூடாத வார்த்தைகளை சொல்லிவிட்டு சிறை சென்றவரை, மிசாவில் ஏதோ போராடி சென்றதை போல சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
அந்த இந்திராவினை அப்படி பழித்த ஸ்டாலினுடன் இந்திரா படத்தோடு காங்கிரசாரும் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றார்களாம்.
இந்த ஸ்டாலினின் சொம்புகள் இருந்தால் தானாக வெளியேறுங்கள், நீங்கள் ஜால்ரா அடிக்க மனுஷ்ய புத்திரன் போன்றோரின் பக்கங்கள் இருக்கின்றது.
No comments:
Post a Comment