Wednesday, November 23, 2016

ஜெய மோகன் கேள்வி பதில்...









Image may contain: 1 person , close-up



தானே கேள்விகேட்டு தானே பதில் எழுதும் வித்தையினை கலைஞருக்கு பின் ஜெயமோகன் சத்தமின்றி செய்துகொண்டிருக்கின்றார்


ஒருவர் கேட்கின்றாராம், " அய்யனே இந்த ஆத்திக நாத்திகம் பற்றி விளக்குவீராக‌..ஏபிநாகராஜன் படத்திற்கு பதில் சொல்லியே திராவிடம் வளர்ந்ததா?."


(இப்படி ஒரு அபத்தமான கேள்வியினை திராவிட கழக வரலாறு அறிந்தவன், பெரியாரின் போராட்டத்தை அறிந்தவன் கேட்கவே மாட்டான்


கேட்டவன் ஒரு பைத்தியம் என்றால் அதற்கு பதிலளித்திருக்கும் ஜெயமோகன் என்ன ரகம் என நீங்களே முடிவு செய்யுங்கள்


நிச்சயமாக இம்மாதிரி கேள்விகள் ஜெயமோகனை தவிர யார் சிந்தனையிலும் உதிக்க வாய்ப்பே இல்லை..)


உடனே ஜெயமோகன் தன் வழக்கமானா நீண்ட அறிக்கையில் ஆத்திகம் அப்படி, நாத்திகம் இப்படி, மூடர்கள் கேள்வி கேட்பார்கள், ஆத்திகத்தை புரிந்துகொள்ளாத முட்டாள்கள் கேள்வி கேட்பது நாத்திகம், திராவிடர் கழகம் அப்படித்தான் வளர்ந்தது என சுமார் 1 கிமி நீளத்திற்கு எழுதி தள்ளியிருக்கின்றார்


தொழிலாளர்களின் கஷ்டம் பாராத கடவுள் என்றொருவர் இருக்க முடியாது என்றான் மார்க்ஸ்


சாதி வாரியாக படைத்து, பிராமணனை உயர்ந்தவனாகவும் சூத்திரனை தாழ்ந்தவனாகவும் கடவுள் எப்படி படைத்திருப்பான் என கேட்டார் பெரியார்


ஆம் அப்படித்தான் கடவுள் படைத்தார், நாங்கள் உயர்ந்த இனம் என மார்தட்டி நின்றது உயர்சாதி


அப்படியானால் நீங்கள் சொல்லும் கடவுள் பொய், மதம் பொய். மனிதனை மனிதனாக மதிக்காத தன்மையினை ஒரு கடவுளும் சொல்லியிருக்காது என மோதினார் பெரியார்


இந்தியாவில் நாத்திகம் தலையெடுக்க முதல் காரணம் சாதி, அந்த‌ சாதிக்கு காரணம் மதம்


அதனால்தான் சாதி ஒழிக்க மதத்தையே எதிர்த்து களமிறங்கினார் பெரியார், மதம் இருக்கும் வரை சாதி ஒழியாது என காந்தியிடமே வாதிட்டவர், காந்தியாலும் பதில் சொல்ல முடியவில்லை


ஆக இங்கே சாதியும் அதன் கொடுமையுமே நாத்திகவாதம் பேச சொன்னதே தவிர வேறு ஒன்றுமல்ல. சாதியினை சொல்லும் நீ பிராடு, மதம் சொன்னால் அதுவும் பொய். கடவுள் சொன்னதாக சொன்னால் கடவுளே பொய் என முழங்கியது தமிழக நாத்திகம்


இந்த உண்மையினை, இந்த வரலாற்றினை, இந்த பெரியாரின் புரட்சியினை எப்படி மறைத்து, 1 கிமீ எங்கெல்லாமோ சுற்றி வந்து ஏபி நாகராஜன் படம் அது இது என வருகின்றார் ஜெயமோகன்


அப்பனே ஜெயமோகா


தமிழ் திரைப்பட காலம் பிறந்திருக்கும்பொழுதே போராட கிளம்பியவர் பெரியார், அப்பொழுது இந்த ஏபி    நாகராஜனின் தாத்தா கூட பிறந்திருக்கமாட்டார்


பெரியாரின் போராட்டத்தினையே இப்படி திசை திருப்பு உங்களுக்கு பணபிரச்சினையில் மோடிக்கு ஆதரவாக உங்கள் பார்ப்பண பேனா அல்லது கீபோர்ட் ஏன் எழுதாது?


எவ்வளவு பொய் சொல்லியிருப்பீர்


மல்லையா தோற்றுபோன தொழில்முனைவர் என்றால், வங்கி கடன் வாங்கி பயிரிட்டு நொடிந்துபோன விவசாயி என்ன கொள்ளைகாரனா? அவன் தொழில் முனைவன் இல்லையா?


மல்லையா வசதியானவன் தப்பிவிட்டான், என் பக்கத்துவீட்டு விவசாய கிழவனுக்கு வசதி இல்லை மாட்டிகொள்கின்றான்.


அப்பட்டமான பார்பானிய ஆதரவினை, ஆம் நான் பார்பானிய எழுத்தாளன் என சொல்லிவிட்டு போகலாமே இதற்கு ஏன் இவ்வளவு வேடம்?


இவரையும் ஒரு எழுத்தாளன், இவன் சொல்வதும் உண்மை என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


பொதுவாக பைத்தியங்களால் சமூகத்திற்கு ஆபத்தில்லை, அதன் பாட்டுக்கு அலையும்.


ஆனால் அரைபைத்தியமாக‌ எழுதும் இம்மாதிரி எழுத்தாளர்கள் பெரும் ஆபத்தானவர்கள்.


ஆனால் மாற்றமுடியாதது அல்லது திருத்தமுடியாதது ஜெயமோகனை போலவே வரலாறு


பெரியாரும் அதன் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை


ஆயிரம் ஜெயமோகன் அர்த்தமில்லாமல் 1000 கிமி எழுதினாலும் அதனை மாற்ற முடியாது


பெரியார் பாஷையில் சொல்வதென்றால் இவர் என்ன வெங்காயம்..





















No comments:

Post a Comment