Thursday, November 17, 2016

பழைய கலைஞராக இருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா?









Stanley Rajan's photo.

Stanley Rajan's photo.








 9 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்காதது வேதனைக்குரியது


இவர்கள் ஆட்சியில் பால் விவசாயி கால்வாயில் ஓடியது, தேன் கிணற்றில் ஊறியது, தங்கள் விவசாயி நிலத்தில் விளைந்தது


அரசியல் செய்பவர் இப்படியா செய்வார்? இதெல்லாம் இனி எடுபடுமா?





இதே பழைய கலைஞராக இருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா?

1000, 500 நோட்டுக்களை எங்காவது வங்கி முன் எரித்து, பெரும் போராட்டங்களை முன்னெடுத்து, எதற்கும் அஞ்சாமல் கல்லக்குடி போல களபேரம் செய்திருப்பார்

காரணம் அந்த போராட்ட குணத்தினை அவர் பெரியாரிடமிருந்து பெற்றிருந்தார், அதே தான் இந்தி எதிர்ப்பு, மிசா, ஈழப்போராட்டம் என அவரை போராட்டத்திலே வைத்திருந்தது

இன்று முதுமையால் அந்த நெருப்பு கலைஞர் செயல்பட முடியவில்லை, அவரினை முழுமையாக பின்பற்றவும் யாருமில்லை

இதோ மம்தா ஏதோ கல்கத்தா பக்கம் முணுமுணுக்கின்றார், முதல் குரலாக எதிர்ப்புகுரல் அவரின் குரல்தான் பதிவாகின்றது

பெரியாரின் மண்ணில் பெரும் சத்தம் ஏதுமில்லை, இது சொல்வது என்ன? பெரியாரின் அந்த உணர்ச்சிமிக்க போராட்டம் கலைஞர் காலம் வரை தொடர்ந்தது

பழைய கலைஞரின் தமிழகமாக இருந்திருந்தால் இன்று நடப்பதே வேறு, தீ இந்தியா முழுக்க பரவியிருக்கும்

ஆள்வதும் நீங்கள், நோட்டை கொடுப்பதும் நீங்கள், அல்லல் பட திராவிட தமிழர்கள் என்ன ஆரிய அடிமைகளா என அவர் பொங்கினால் தமிழகமும் பொங்கியிருக்கும்

கலைஞர் முதுமையானதும் எல்லாம் மாறிற்று. அந்த பெரியாரின் பெரு நெருப்பு அணைந்தே போயிற்று

இனி மத்திய அரசுக்கெதிரான பெரும் போராட்டம் தமிழகத்தி எடுபடும், வெற்றிபெறும் என நினைக்கின்றீர்கள்

ஒருகாலமும் இல்லை. அதற்கு பெரியாரின் தைரியமும் கலைஞரின் போராட்ட குணமும் வேண்டும்

இப்பொழுது யாரிடமும் அந்த இரண்டும் இல்லை. வரவும் வராது.

நிச்சயம் ஒரு காலத்தில் கலைஞரை அடிக்கடி நினைவு கூர்வோம், ஏன் இப்பொழுதே நினைக்க தொடங்கிவிட்டோம் அல்லவா? இதுதான் கலைஞரின் முத்திரை.

(இந்த தளபதி அல்லக்கைகள் எல்லாம் இப்பொழுதும் சண்டைக்குத்தான் வருவார்கள், பாருங்கள் )







 சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு




அண்ணே வைகோ உங்க கூட ஆர்ப்பாட்டம் பண்ண வரவில்லையா?




 


No comments:

Post a Comment