Thursday, November 24, 2016

காவேரி எனும்பொழுது வராத ஒற்றுமை...




Stanley Rajan's photo.


காவேரி எனும்பொழுது வராத ஒற்றுமை,


அணுவுலை எனும்பொழுது வராத ஒற்றுமை


மீத்தேனுக்கு வராத ஒற்றுமை,





கங்கை கரை திருவள்ளுவர் சிலை பிரச்சினைக்கு வராத ஒற்றுமை,

முல்லை பெரியாருக்கு வராத ஒற்றுமை

ஜல்லிகட்டுக்கு வராத ஒற்றுமை

மீணவன் சுட்டுகொலை என்றால் வராத ஒற்றுமை,

சேது சமுத்திர திட்டத்தில் வராத ஒற்றுமை

தமிழக பெரும் தொழிற்சாலைகள் முடங்கும் போது வராத ஒற்றுமை

மின்சாரமோ, குடிநீரோ, சாலை பிரச்சினைகளில் வராத ஒற்றுமை

கேரளா, கன்னடம் போன்ற மாநிலங்கள் அழிச்சாட்டியம் செய்யும் பொழுது வராத ஒற்றுமை

கனிம மணல், கிரானைட், ஆற்றுமணல் என எதற்கும் வராத ஒற்றுமை
....
..
சுருக்கமாக தமிழக, தமிழ் மக்களின் நலன் எதற்கும் வராத ஒற்றுமை
...
...
..
...

கருப்பு பணத்திற்கு எதிராக மட்டும் தமிழக கட்சிகளின் எம்பிகளிடையே டெல்லியில் வந்ததாம்

கருப்பு பண சரண்டர் இவர்களின் வயிற்றேரிச்சலை எந்த அளவிற்கு கிளறியிருக்கின்றது என்பதற்கு இதனை விட என்ன ஆதாரம் வேண்டும்?

அதாவது தமிழர் தொழிலும் வாழ்வும் அழியும்பொழுதெல்லாம் இணையாத இவர்கள், தங்கள் வாழ்வும் வளமும் சிக்கலில் வந்தபொழுது இணைந்துகொண்டார்கள்.

ஆனால் இவர்கள் கட்சி நடத்துவதும், உழைப்பதும் தமிழர்களுக்காகவாம்

எங்களிடம் கருப்பு பணம் இருக்கின்றது, அதற்கு ஆபத்து என்றால் ஒன்றுசேர்வோம் என எப்படி பகிரங்கமாக ஒப்புகொள்கின்றார்கள்

ஒன்று இந்திய தேசியம் தமிழருக்கு எதிரானது என அரசியல் செய்ய வேண்டும் அல்லது இம்மாதிரி நேரங்களில் இந்திய மக்கள் பாவம் என இந்திய கட்சிகளை திரட்டி அவர்கள் பின் ஒளிந்துகொள்ள வேண்டும்

இதுதான் தமிழக கட்சிகளின் பிசினஸ்..சூப்பர் பிசினஸ்

மொத்த கும்பலையும் அப்படியே பிடித்து ஏதோ ஒரு தீவில் பாம்பு மட்டும் இருக்குமாம் அங்கு கப்பலேற்ற வேண்டும்.

 








Stanley Rajan's photo.















பணம் மாற்றும் பிரச்சினைக்கே இந்த அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் வரிந்து கட்டுகின்றார்களே, நாளை இக்கட்சிகளின் சொத்துக்கள் எல்லாம் அரசுடமை என்றால் என்ன செய்வார்கள்?

கட்சி நடத்துவது மக்களுக்காக என்றால், மக்களுக்கு அந்த சொத்துக்களை கொடுங்கள் என அரசு பறிமுதல் செய்தால் எப்படி இருக்கும்?

கட்சி அலுவலகம் முதல் டிவி வரை அரசு எடுத்துகொண்டால் எப்படி இருக்கும்?


ஒருவேளை அப்படி ஒரு அறிவிப்பு வந்தால், நிச்சயம் நமது அரசியல் கட்சி தலைவர்கள் எங்கு நிற்பார்கள்?

அடுத்த தேர்தலிலா? ம்ஹூம்

மாறாக‌, ஐரோப்பாவில் அகதிகள் வரிசையில் நிற்பார்கள்.















No comments:

Post a Comment