கலைஞர் எவ்வளவோ சொல்லியிருக்கின்றார், சில விஷயங்கள் பின்பற்றதக்கது, அவர் குறிப்பிட்டு சொல்லும் வாழ்க்கை முறை ஒன்று உண்டு
"உலகம் கண் விழிக்கும் முன் நம் வேலைகளில் பாதி முடிந்திருக்கவேண்டும்"
அதிகாலை எழுந்து, தயாராகி அன்றைய தினத்தை மற்றவர்களை விட முன்னமே சந்திக்கதயாராக வேண்டும் என்பார்,
சொல்லியது மட்டுமல்ல வாழ்ந்தே காட்டுகின்றார், 92 வயதிலும் அப்படியே. அவரின் வெற்றிக்கும், பெரும் வரலாற்றிற்கும் அதுவும் ஒரு காரணம்.
அன்று அதிகாலையிலே மக்களை புரட்டிபோட்டன என்றால் இப்படித்தான், இவ்வளவிற்கும் இன்றிருக்கும் வசதிகள் அன்று இல்லை.
சும்மா சொல்லகூடாது, சில விஷயங்களில் அவரை பின்பற்றியே தீரவேண்டும்.
தாமதமாக விழிக்கும் நாட்களில், குறிப்பாக மேனேஜர் முன்பு ஹிஹிஹி என வழியும் நாட்களில்எல்லாம் அவரின் அந்த வரிகளே கண்முன் தெரிகின்றன.
No comments:
Post a Comment