Monday, November 28, 2016

இன்றைய அரசல் புரசல் செய்திகள்...








நடிகர் தனுஷ் யார் மகன் என‌ மேலூர் தம்பதிக்கும், கஸ்தூரி ராஜாவிற்கும் இடையே கடும் சர்ச்சை, மரபணு சோதனைக்கு கோரிக்கை விடுக்கபோவதாக‌ மேலூர் தம்பதி அறிவிப்பு

இவர்கள் இருவரும் தனுஷ் யாருக்கு மகன் என சண்டையிட்டு கொண்டிருக்க, அங்கு வரும் செய்திகளை பார்த்தால் தனுஷ் யாருக்கு மருமகன் என அடுத்த சண்டை வரும் போல‌

வரட்டும் அது ரஜினிகாந்த் பிரச்சினை


தனுஷின் சகோதரர் செல்வராகவனை தேடி யாராவது வந்தால் இன்னும் நன்றாக இருக்கும், அவரின் படத்தினை பார்த்த நீதிபதிகள் இருந்தால் அவர்களே ஒப்படைத்துவிடுவார்கள்

எப்படியோ தனுஷ் பிரச்சினை வேறுமாதிரி செல்கிறது, விரைவில் சிம்பு படங்களில் சில அதிரடி சென்டிமெண்ட் காட்சி வரலாம்.

"நான் எவனையோ அப்பாண்ணு சொல்லி முன்னுக்கு வந்தவன் இல்ல....

எனக்கிருக்கிறது சொந்த அப்பா,
தமிழ் தந்த அப்பா"

என்ற ரீதியில் வசனம் இருக்கலாம்







 மோடியின் அறிவிப்புக்கு 92 சதவீத பேர் எதிர்ப்பு: இளங்கோவன் பேச்சு




உங்களுக்கும் தான் கட்சிக்குள் 90% சதவீத எதிர்ப்பு, பதவியினை கூட பிடுங்கி விரட்டி விட்டார்கள், அதற்காக என்ன செய்தீர்கள்? ஜம்மென்று கட்சிக்குள் அமரவில்லையா?

அந்த 92%ம் என்ன கணக்கு? சத்யமூர்த்தி பவனில் இருக்கும் காங்கிரஸ் காரர்களா?


அப்படியானால் ஆதரித்த 8% யார்? அந்த தங்கபாலு கோஷ்டியாக இருக்குமோ?






யாரை கேட்டு நேரு இந்தியாவினை பிரித்தார்? அதுபோல மோடியும் யாரை கேட்காமல் கரன்சியினை முடக்கினார் : ஹெச். ராஜா

அதானே யாரை கேட்டு காந்தி போராடினார், யாரை கேட்டு அவர் உண்ணாவிரதம் இருந்தார்? யாரை கேட்டு தேசம் அவர் பின்னால் சென்றது? இப்படி எல்லாம் கேட்டால் பதில் சொல்ல முடியுமா?

சத்தியமாக யாராலும் பதில் சொல்ல முடியாது ராசா, ஆனால் உங்களால் ஒரு கேள்விக்கு பதில் சொல்லமுடியும்.


யாரை கேட்டு காந்தியினை கோட்சே கொன்றான்? , யாரை கேட்டு பாபர் மசூதியினை இடித்தார்கள்? யாரை கேட்டு குஜராத்தில் கலவரம் நடந்தது?

இதற்கான பதில் உங்களுக்கு தெரியும் அல்லவா? சொல்லுங்கள்

ஆனாலும் நாடி நரம்பெல்லாம் சாணியும், மாட்டு மூத்திரமும் ஓடும் ஒருவரை தவிர இப்படி குதர்க்கமாக கேள்வி கேட்க முடியாது

நாஞ்சில் சம்பத் எவ்வளவு பரவாயில்லை.





தி.மு.க. போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை: தமிழிசை பேட்டி

அகில இந்திய அளவில் காங்கிரஸ் போராட்டத்திற்கே பெரும் ஆதரவு இல்லை, இதில் தமிழகத்தில் என்ன ஆதரவு பெருகிவிட போகின்றது?

காவேரிக்கும், அணுவுலைக்கும், மீத்தேனுக்கும், ஜல்லிகட்டுக்கும் திரளா மொத்த தமிழகமா கரன்சிக்கு திரளும்?, தமிழன் தூங்கி நெடுநாள் ஆகிவிட்டது அம்மணி.


சரி அம்மணி, எப்படியோ ஒரு எதிர்ப்பினை திமுக செய்கிறது, குறைந்தபட்சம் சிறை நிரம்பவாவது, மண்டபம் நிரம்பவாவது ஒரு கூட்டம் சேர்கிறது

பாஜக ஆர்ப்பாட்டத்தில் சிறையின் ஒரு அறை நிரம்பவாவது , கூட்டம் சேர்ந்ததா?, முன்பு பாஜக ஆர்பாட்டத்தில் உங்களை தவிர யார் வந்தார்? உங்கள் குடும்பத்தாரை கூட காணவில்லையே

இதற்குத்தான் சொன்னது, ஸ்ருமிதி இராணி செருப்போடு சேர்த்து இவர் வாயினையும் தைக்க வேண்டும் என்பது






நோட்டு செல்லாது அறிவிக்க கூறினால் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்: ப.சிதம்பரம்

ஆனால் ஆயிரம் ஊழல் குற்றசாட்டு இவர் அமைச்சராக இருந்த‌ அரசு மீது சுமத்தபட்ட பொழுது இவர் கம்மென்று நிதியமைச்சராக‌ இருந்தவர் என்பதனை நாமெல்லாம் மறந்துவிடவேண்டும், மறந்து தொலைப்போம்.







மு.க.ஸ்டாலின் கைது

# ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்., போராட்டமெல்லாம் நடத்திவிட்டேன், நானும் அரசியல்வாதிதான்.





 சென்னை மெட்ரோ ரயில் சேவையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ்



தமிழக அரசாங்கமே தனியார் மயமாகி வெகுகாலம் ஆகிவிட்டது, இதில் மெட்ரோ ரயிலுக்கு மல்லுக்கு வந்து விட்டார் மருத்துவர் அய்யா




மோடியை திடீரென ஆதரிக்க காரணம் என்ன? - வைகோவுக்கு முத்தரசன் கேள்வி

அட அவரை விடுங்க, பிரீயா குடுத்தா பினாயிலையும் குடிப்பார்




 

No comments:

Post a Comment