Sunday, November 20, 2016

இந்திரா வரிசையில் மோடி ஒரு துணிச்சல் தலைவர்

https://youtu.be/_lhEblsXBGc

பணமாற்றம் : கருத்துக்கள் பலவிதம் 


இந்திரா வரிசையில் மோடி ஒரு துணிச்சல் தலைவர் என்றால், ஏய் மோடி கொலைகாரன், அயோக்கியன் அய்ய்கோ, யாருடம் யாரை ஒப்பிட்டாய் என பல ஒப்பாரி குரல்கள்


இந்திரா மீதும் ஏக குற்றச்சாட்டு உண்டு, பஞ்சாப் அவரால் ரட்த்தகாடான வரலாறு உண்டு, இன்னும் காமராஜரை ஓரங்கட்டியது என உள்கட்சி தகறாறும் உண்டு


ஆனால் அம்மகராசி செய்த பெரும்பான்மையான துணிச்சலான நடவடிக்கைகள் இந்நாட்டிற்கு பெரும் நன்மையினை, பாதுகாப்பினை கொண்டுவந்தன என்பதை மறுக்க முடியுமா?




மோடி இப்பொழுதுதான் வந்திருக்கின்றார், மகா துணிச்சலாக பல காரியங்களை செய்கின்றார், உலக அரசியல் சதுரங்கம் புரிந்தால் அவர் வியட்நாம், மங்கோலியா, ஆபகன், பலுசிஸ்தான் என பல இடங்களில் செய்யும் ராஜதந்திரம் புரியும் புரியாவிட்டால் வழக்கம் போல அவரை கிண்டல் செய்துகொண்டே இருங்கள், உங்கள் பிரச்சினை


இந்திரா எந்த கட்சியிலிருந்து வந்திருந்தாலும் நாம் ஆதரிப்போம், அப்படி மோடி எங்கிருந்து வந்தார் என்பது எமக்கு பிரச்சினை அல்ல, மாறாக நாட்டிற்கு என்ன செய்கின்றார் என்பதுதான் கவனிக்கவேண்டியது


இந்திராவினை எப்படி மொத்த தேசமும், காமராஜரும் சேர்ந்து எதிர்த்தாரோ?, அப்படியோ மோடியும் சகல தரப்பாலும் எதிர்க்கபடுகின்றார்


அப்படி என்ன செய்தார்?


இந்திரா போலவே எல்லோர் தூக்கத்தையும் கெடுத்தார் அல்லவா? அது ஒன்றுதான் இவர்களுக்கு தவறு


மோடிக்கு குஜராத் கலவரம் என்றால் இந்திராவின் பஞ்சாப் படுகொலைகள் என்ன வகை? மோடி அத்வாணியினை ஓரம் கட்டினால் என்றால் இந்திரா காங்கிரஸ் கிழவர்களை ஓரம் வைத்தது என்ன வகை?


ஆக இந்திராவினை காங்கிரசை கடந்தும், மோடியினை பாஜகவினை கடந்தும் பார்க்கின்றோம் அவ்வளவுதான்


அரசு மிகபெரும் நடவடிக்கையினை எடுக்கின்றது, அதற்கு
ஒத்துழைப்பு கொடுக்கவேண்டியது மக்கள் கடமை. அவர்கள் கொடுத்துகொண்டுதான் இருக்கின்றார்கள்


பின்ன எது பிரச்சினை?


கருப்பு பணத்தில் தொழில்நடத்தும் கட்சிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், கல்வி தந்தைகள், அவர்கள் கையில் இருக்கும் ஊடகங்கள் இவைகள்தான் பிரச்சினை, அவைகள்தான் பிரச்சினைகளை பூதாகரமாக்குகின்றன‌


பெரும் ஒப்பாரியினை அவைதான் வைக்கின்றன‌


ஆனால் இது நெடுங்காலம் ஆண்டு அட்டகாசம் செய்த பெரும் ராட்சதன் சாகும் பொழுது எழுப்பும் மரண ஒலி


அந்த ஒலியின் சத்தம் பெரிதாகத்தான் இருக்கும்


பெரும் ஊழல், கருப்பு பணம் சரியும்பொழுது சத்தம் வரத்தான் செய்யும்


வரட்டும், அது ஓயமட்டும் வரட்டும்


அதன்பின் தேசம் செழிக்கட்டும்.



No comments:

Post a Comment