Friday, November 18, 2016

கருப்புப் பணத்தை யாரும் தொடக்கூடாது : எம். ஆர். ராதா.....

https://youtu.be/5RB1SrYk6bs

இதனை விட கருப்பு பணத்தினை ஒரு நடிகன் காமெடியாக சொல்லிவிட முடியுமா?


சமூகத்தை நிரம்ப நேசித்தாலொழிய ஒரு நடிகனால் இப்படி ஒரு காட்சியினை அமைத்து நடிக்க முடியாது, அவ்வளவு அழகாக சொல்லியிருக்கின்றான்


எம்.ஆர் ராதாவினை ஏன் கொண்டாடுகின்றோம் என்றால் இதற்காகத்தான், "நான் வரிகட்டவில்லை, அவர்களும் கேட்கவில்லை, நான் நிறைய பாக்கி வைத்திருக்கின்றேன்.." என பகிரங்கமாக அறிவித்த நடிகன் அவன்.





எக்காலமும் பொருந்தி வரும் காட்சிகளை அன்றே நடித்திருக்கின்றான் அல்லவா? அவனே தலைவன், அவனே தீர்க்கதரிசி

இப்படி ஒரு கலைஞன் இனி சாத்தியமா? எம்மை பொறுத்தவரையில் உலக வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட மிக உன்னத கலைஞர்களில் ஒருவன்

இன்றிருக்கும் நடிகர்களில் இவரின் இடத்தினை ஒருவன் நெருங்க முடியுமா? நிச்சயம் ஒரு காலமும் முடியாது, தலைவனின் தைரியமும் , சாதுர்யமும், நடிப்பும், சமூக பற்றும் அப்படி

பட்டையினை கிளப்பியிருக்கும் வீடியோ இது

சுடதெரியாமல் சுட்டதை தவிர மிக எல்லாவற்றையும் ஒழுங்காக செய்தவன் என் தலைவன்

வாழ்க தலைவன் எம்.ஆர் ராதா புகழ்,











நாடே சிக்கலில் இருக்கும் போது ரெட்டி வீட்டு கல்யாணம் மட்டும் எப்படி அவ்வளவு செலவழித்து நடத்தபட்டது?

ஆடிய நடிகைக்கு மட்டும் 1 கோடி கொடுத்தார்களாம்

தேசமே வரிசையில் நிற்க, இவர்களுக்கு புறவாசல் வழியே மாற்றி கொடுத்தது யார்? மருத்துவமனைகளே திணறி நிற்க , இந்த கோடீஸ்வர வீட்டு கல்யாணம் களை கட்டியது எப்படி?


காவேரியினை விடாத கன்னட அரசு, இந்த செய்திகளை மட்டும் வெளியிடவா போகின்றது?

கன்னடம் என்றாலே சர்ச்சையாக‌ போய்விட்டது, அங்கிருக்கும் நீதிபதிகள் ஒருபக்கம், வாட்டாள் நாகராஜ் ஒரு பக்கம், இந்த பண கெடுபிடியிலும் பெரும் செலவு செய்திருக்கும் ரெட்டி ஒருபக்கம்

ஒருவேளை அது தனி நாடோ? அல்லது பாஜக ஆளும் கட்சி என்றால் கண்ணை மூடிகொள்வார்களோ??











No comments:

Post a Comment