திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் -
உச்சநீதிமன்றம் உத்தரவு
எல்லா நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும் தினமும் தேசிய கீதம் பாடுகின்றார்களா? இல்லையா? என தெரியாது, இனி தியேட்டரில் கட்டாயமாக படிக்க வேண்டுமாம்,
எல்லா தொலைகாட்சி, வானொலி நிலையங்கள் தினமும் தேசிய கீதத்தை கண்டிப்பாக ஒளிபரப்ப சட்டம் இருப்பதாக தெரியவில்லை.
அது ஏன் திரையரங்குகளில் மட்டும், அங்கு இருப்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களோ? என்னவோ
இனி திருட்டு விசிடியில் தேசிய கீதம் வந்தால் உள்நாட்டில் சுட்டது, வரவில்லை என்றால் வெளிநாட்டில் சுட்டது என நாமாக முடிவு செய்துகொள்ளலாம்
தியேட்டரில் தேசிய கீதம் பாடித்தான் தேசிய உணர்வை வளர்க்கும் நிலை, தமிழக அரசு எப்படி சிந்திக்கின்றது என தெரியவில்லை
இங்கே டாஸ்மாக் முதல் பல விவகாரங்கள் தமிழக அரசால் நடத்தபடுபவை, தேசிய கீதம் அல்ல தமிழ்தாய் வாழ்த்தினை பாடிவிட்டுத்தான் "கடை" திறக்கவேண்டும் என விபரீத சிந்தனைகள் வராத வரை நல்லது
"நீராடும் கடலுடுத்த.." என பாடிவிட்டு மணல் குவாரிகளும், கிரானைட் குவாரியும், கனிம மண் குவாரியும் அன்றாட பணி தொடங்கினால் பார்பதற்கு எப்படி இருக்கும்?
No comments:
Post a Comment