https://youtu.be/-BQSOkkoDjc
இன்று நன்றி தெரிவிக்கும் நாளாம், நவம்பர் கடைசி வியாழ கிழமையினை அப்படித்தான் வெள்ளையர் சொல்கின்றனர்
வெள்ளையர் சொல்லிவிட்டால் உடனே உலகம் கொண்டாட கிளம்பும் அல்லவா?, கிளம்பிற்று ஆளாளுக்கு நன்றி நன்றி என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
இந்த முகநூலில் என்னோடு வரும் எல்லா நண்பர்களுக்கும் நன்றி நன்றி என நாமும் சொல்லி கொள்வோம்
என்னையும் மதித்து உற்சாகபடுத்துவதாலும், நண்பராக ஏற்றிருப்பதாலும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்
சீமானின் அல்ட்ராசிட்டிகள் எல்லை மீறி செல்ல, அதன் உண்மை நிலையினை எழுத தொடங்கியபின் நண்பர்கள் குவிந்தார்கள்
அதன் நாம் சிலாகித்து எழுதியதை சிலாகித்தவர்கள் வந்தார்கள்
கலைஞரை கலாய்க்க தொடங்கினாலும் வந்தார்கள், அவரை ரசித்தாலும் வந்தார்கள்
ஆக எமக்கு பல நண்பர்களை கொடுத்ததில் நன்றிகள் அங்கிள் சைமனுக்கும் கலைஞருக்குமே சாரும்.
இன்னும் புலிகள், வைக்கோ, திருமா, இஸ்ரேல், யூதர், அமெரிக்கா என பெரும் வில்லன்கள் வரிசை உண்டு, அவர்களுக்கும் நன்றிகள்
அவதாரம் குஷ்பூவிற்கும் சிறப்பு நன்றிகள், அவரை வியந்து பார்க்கும்பொழுது உற்சாகபடுத்தவே பலர் வந்தார்கள்,
இப்படி ஏராளமானோர்
அவர்கள் மூலமாக எவ்வளவோ நன்மைகள் கிடைத்தன, உலக அரசியல், பொருளாதாரம், பிராமணியம், திராவிடம், விஞ்ஞானம் என பல வகையான விஷயங்களை கூர்மைபடுத்த முடிந்தது
அற்புதமான சமையல் குறிப்புகளை பல நண்பர்கள் கொடுத்தார்கள்
குஷ்பூ வீட்டு போன் நம்பர் கொடுக்கின்றேன் என சொன்ன நண்பரை காணவில்லை, ஆனால்
நிச்சயம் எனக்காக தேடிகொண்டிருப்பார்,
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என அடிக்கடி கண்களை துடைத்துகொள்வேன்
அப்படி பல நண்பர்களை கொடுத்த முகநூல் இது.
ஒரு விஷயம் சொல்லமுடியும்
மொழி,இனம்,கட்சி,அரசியல் தாண்டி இந்தியன் எனும் வகையில் ஏராளமான நண்பர்கள் இருக்கின்றார்கள், அதுதான் மகிழ்ச்சிகுறியது அவர்களுக்கும் நன்றிகள்
எல்லா நண்பர்களுக்கும் நன்றி, கோட்டான கோடி நன்றி.
No comments:
Post a Comment