ஏதோ அம்பானி மளிகை கடையில் ரூபாய் நோட்டுக்களை மாற்றலாமாம்
மண்டையினை மறைத்தாலும் கொண்டையினை மறைக்க தெரியாத இந்த மோடியின் கொள்கைகளை என்ன சொல்வது
இனி வங்கிகள் எதற்கும்? ரிசர்வ் வங்கி எதற்கு?
எல்லா பண பரிவர்த்தனைகளையும் அம்பானியே பார்த்துகொள்வாரா? நிதி அமைச்சகம் எதற்கு?
இதற்கு மேலும் மோடிக்கு வக்கலாத்து வாங்க முடியாது, எப்படியும் ஒழியட்டும்
மோடி தேசத்தை காப்பாரோ இல்லையோ, இனி அவரை யாரும் காப்பாற்ற முடியாது
டாலருக்கு நிகரான மதிப்பு 70ஐ நெருங்கிற்று
மோடியும் இந்தியாவும் மூழ்கிகொண்டிருக்கின்றது
வந்தே மாதரம் ..ஒரு தரம்.
இரண்டு தரம்...
விரைவில் மூன்று தரம்
கொசுறு
போலீஸிடம் சிக்கிய மதன், பணம் தொடர்பாக எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தை குறித்து திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சரி மிஸ்டர் பச்சைமுத்து தயாராகுங்கள், மறக்காமல் அந்த டோப்பாவினை எடுத்துகொள்ளுங்கள்.
நாங்கள் பாரி வள்ளல் பரம்பரையில் வந்தவர்கள் என மார்தட்டி கொள்பவர்கள் இவர்கள் தான்.
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, வாய்ப்பு கிடைத்தால் முல்லையினை வேரோடு புடுங்குபவர்கள் இவர்கள்
நல்ல நேரத்தில் சிக்கி இருகின்றார், கதை எப்படி செல்கிறது என பார்க்கலாம்
(அந்த வர்ஷா என்பவரை கேமரக்கள் காட்டவே இல்லை, புதிய தலைமுறையிலாது அவரை காட்டுவார்கள் என நம்புவோம்)
கொசுறு
இன்றைய பள்ளி மாணவ, மாணவியர் தான் நாட்டை காப்பாற்ற போகும் வீரர்கள், ஆட்சியாளர்கள்: விஜயகாந்த்
அதாவது இவர் கட்சியினை காப்பாற்ற வருங்காலத்தில் யாருமில்லை என்பதை இப்படி சொல்கின்றார், ஒரு பயலும் தன் கட்சிக்கு இனி வரமாட்டான் என்பதை இப்படித்தான் சொல்லமுடியும்
நல்லது அவர்கள் நாட்டையே காப்பாற்றட்டும்
No comments:
Post a Comment