Wednesday, November 30, 2016

மோடி அரசு விரைவில் பாடம் படிக்கலாம்...

"ஒரு நாடு சரியாக வளராமல் அதன் நிர்வாகத்தில் மாற்றம் செய்தால் சோவியத் போல சிதறும், அதன் அடிப்படைகளை மிக வலுவானதாக செய்துவிட்டே மாற்றங்களை செய்யவேண்டும், அல்லாவிட்டால் குழப்பங்களும் மக்களிடம் வெறுப்புமே மிஞ்சும்" : முன்னாள் சீன அதிபர் டெங் சியோ பிங்


அதாவது வளர்ச்சி அடைந்த நாடுகளின் செயல்பாட்டினை வசதிகுறைந்த நாடுகள் முயற்சிக்க கூடாது, எல்லா வசதியும் பெற்றபின்பே சிக்கலான பிரச்சினைகளை கையில் எடுக்க வேண்டும்


மோடி அரசு இதனைத்தான் செய்ய தவறியது


கையிலும், பர்சிலும், சுருக்கு பையிலும், மடியிலும் கட்டாக பணம் கொண்டு செல்லும் கலாச்சாரம் இந்தியருடையது, மாற இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம்


எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைத்துவிடவில்லை


இதில் போன் மூலம் பணபரிவர்த்தனை, எல்லாமும் வங்கிகணக்கு என நிர்பந்திப்பது யானையினை குதிரை வேகத்தில் ஓட சொல்வது போன்றது


மோடி அரசு விரைவில் பாடம் படிக்கலாம், அவர்களுக்கென்ன? நிச்ச்யம் அடுத்தமுறை வரப்போவதில்லை அதனால் எல்லா ஆட்டமும் ஆடிவிட்டுத்தான் போவார்கள்.


அடுத்த தேர்தல் பற்றி அவர்களுக்கு இப்பொழுதே முடிவு தெரிந்துவிட்டது.

No comments:

Post a Comment