அட திருமா? இது நிஜமா?
இரு நாட்களுக்கு முன்புதானே அய்யா காங்கிரசை ஆதரிக்கவேண்டும் என முழங்கினீர்? இப்பொழுது பிரபாகரனுக்கும் விழாவா?
அடுத்து என்ன? ராஜிவிற்கும் பிரபாகரனுக்கும் ஒரே மேடையில் அஞ்சலியா?
எப்படி இருந்த திருமா இப்படி ஆகிவிட்டார். அந்தோ பரிதாபம்.
இந்த பாவம் உங்களை சும்மா விடாது மிஸ்டர் வைகோ..
பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலமையில் ரத்த தானம்
இவர்கள் தலைவன் பிரபாகரன் இருக்கும் வரை ஈழத்தில் ரத்த ஆறுதானே ஓடியது, தமிழகத்திலும் சில இடங்களில் ஓடியது.
அவர்கள் கொள்கையே ரத்தத்தை ஓடவிடுவதுதானே...
தலைவனின் உண்மை தொண்டர்கள் என்றால், உயிர்காக்கும் ரத்தத்தினை ஓடவிடவேண்டுமா? இல்லை இப்படி பொறுப்பாக காப்பாற்றவேண்டுமா?
இது தலைவனுக்கும் அவன் கொள்கைகளுக்கும் செய்யும் துரோகம் அல்லவா?
என்ன தொண்டர்கள் இவர்கள்?
தலைவன் சிந்தி சிந்தி ஓடவிடுவானாம், இவர்கள் காப்பாற்றுவார்களாம்
அப்படியானால் பிரபாகரன் ஒழிக என சொல்லிட்டு அல்லவா ரத்தம் காக்க வேண்டும்
என்ன கட்சியோ?, என்ன தத்துவமோ? என கொள்கையோ? ஓன்றும் புரியாது.
No comments:
Post a Comment