அவ்வப்போது சில மர்ம விஷயங்கள் உலகில் நடக்கும், விண் கல் விழுந்தது என்பார்கள், மர்ம ஒளி என்பார்கள், ஏலியன்ஸ் என்பார்கள் இன்னும் ஏராளம்
அப்படி இப்பொழுது ஒரு பரபரப்பு வந்திருக்கின்றது
ஐரோப்பாவில் வானம் இடிந்து விழுந்ததை போல சத்தம் கேட்டதாம், பல நாடுகளில் அது உணரபட்டிருக்கின்றது
தாமதமாக விசாரிக்க தொடங்கிய வான்வெளி விஞ்ஞானிகள், அது வேறு எங்கோ கிரகம் வெடித்திருக்கலாம், அங்கு பூமி அதிர்ச்சி போல ஏதும் நடந்திருக்கலாம் அது இங்கு கேட்டிருக்கலாம் என்கின்றார்கள்
அந்த அலறல் அல்லது அதிர்ச்சி கிறிஸ்தவர்கள் பற்றி தெரியும் அல்லவா?
அடுப்பில் தீ பிரகாசமாக எரிந்தாலே "அய்யய்யோ கடைசி காலம், அதோ இயேசு வருகின்றார்" என கிளம்புவார்கள்
இப்பொழுது வானத்தில் இருந்து வேறு சத்தம் வந்துவிட்டதா, கேட்கவே வேண்டாம். இது தேவனின் எக்காள ஒலி என ஆரம்பித்து விட்டார்கள். வாய்ப்பினை விடுவார்களா?
இந்தியா கிறிஸ்தவ தேசமாக இருந்திருந்தால் நமக்கும் கேட்டிருக்கும், ஆனால் தேவனாகிய கர்த்தன் தன்னை நம்பும் விசுவாசிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கின்றார் என கிளம்புகின்றார்கள்
ஐரோப்பா வானில் அப்படி என்ன மர்ம சத்தமோ தெரியவில்லை
இனி ஐரோப்பியர்களை கவனமாக அந்த சத்தத்தை கேட்க சொல்லவேண்டும், ..பணம்..இந்துத்வா. என இரு வார்த்தைகள் வந்தால் போதும், அது இந்தியர் குரல்தான்
நிலாவில் எதிரொலித்து ஐரோப்பாவில் கேட்டிருகலாம்.
ஜெ செய்தி
முதலமைச்சர் ஜெயலலிதா மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். வார்டு மாற்றபட்டார், அவர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம் : பிரதாப் ரெட்டி
என்ன இயல்பு நிலை?
என்ன வார்டு மாற்றம்?
என்ன வீடு திரும்பலாம்?
"திரும்ப திரும்ப பேசுற நீ,
திரும்ப திரும்ப பேசுற நீ.."
(என்றோ பார்த்த வடிவேலு இன்று டாக்டர் வேடத்தில் தெரிகின்றார்.)
ஆனாலும் டாக்டரும் அந்த வடிவேலு போலவே சளைக்காமல், அசராமல் சொல்கின்றார் அல்லவா? அதுதான் பரிதாபம்.
No comments:
Post a Comment