Friday, November 11, 2016

ட்ரம்புக்கு வாழ்த்து : ஐ.எஸ், அல்கொய்தா

டிரம்பை வாழ்த்தி செய்தி தெரிவித்தனர் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள்


அதாவது முன்பு புஷ் ஈராக்கினை போட்டு அடித்தாராம் , உடனே மக்கள் எல்லாம் தீவிரவாதிகளை ஆதரித்தார்களாம், இனி டிரம்பும் அதே போல மேற்காசியாவில் அட்டகாசம் செய்வாராம் உடனே இவர்கள் இயக்கம் இன்னும் வளருமாம்


அதனால் நன்றி தெரிவிக்கின்றார்களாம்




வருங்காலத்தில் ராஜபக்சே இலங்கையில் ஆட்சிக்கு வந்தால், இப்படி சீமான், வைகோ போன்றோர் வாழ்த்து சொல்லும் நிலை வரலாம், மனிதர் இல்லாததால் இவர்களுக்கு மார்க்கெட் ரொம்ப டல்...


அது இருக்கட்டும், அதனை விட இவர்களுக்கு மகா முக்கியம் தமிழகத்தில் கலைஞரும், டெல்லியில் சோனியாவும் அமரவேண்டும்


அப்படியென்றால் இந்த அப்பல்லோ மர்மத்திற்கும், கரன்ஸி காய்ச்சலுக்கும் எப்படி எல்லாம் குதிப்பார்கள் தெரியுமா?


எல்லாவற்றிற்கும் கலைஞர் காரணம், அவர் மஞ்சள் துண்டு காரணம் என வரிந்து கட்டுவார்கள்,


இப்பொழுது சத்தமே இல்லை. ஆக இவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என பலரும் பல விஷயங்களுக்காக காத்தே இருக்கின்றனர்


அல்கய்தா தீவிரவாதிகள் நினைத்தது பலித்துவிட்டது, இந்தியாவிலும் இலங்கையிலும் இப்போதைக்கு வாய்ப்பில்லை :)



No comments:

Post a Comment