மும்பை ரஜினி விழாவில் அழைக்கபடாமல் வந்து மொத்த நிகழ்ச்சியினையும் குழப்பிய சல்மான்கான் மீது பெரும் சந்தேக பார்வைகள் விழுகின்றன
அவ்வளவு பெரும் நடிகர், அழைக்காமல் எப்படி வந்தார். வந்து என்ன சொல்ல நினைக்கின்றார்? மும்பை நடிகர்களின் மறைமுக சதியா? தெற்கத்திய நடிகர்கள் அந்நாள்முதல் அவர்களுக்கு மும்பையில் வெறுப்பானவர்களா என ஏக சர்ச்சை
கமலும், சிரஞ்சீவியும் மும்பையில் ஜொலிக்கமுடியாமல் திருப்பி அனுப்பபட்ட அக்கால காட்சிகளும் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன, ஹேமமாலினி, ஸீரிதேவி என நடிகைகள் மின்னிய மும்பை உலகில், ஒரு தெற்கத்தி நடிகன் ஜெயிப்பது இன்று வரை முடியாத விஷயம்
சும்மாவே சர்ச்சையில் சிக்கும் சல்மான்கான், வாலிண்டியராக வந்து குழப்பி சென்றதும் பல விஷயங்கள் கிளம்புகின்றன.
வந்தவர் எல்லோருடனும் நின்று படமெல்லாம் சிரித்த முகத்தோடு எடுத்திருக்கின்றார், மறக்காமல் எமிஜாக்சன் பக்கத்திலே நின்றுகொண்டிருக்கின்றார்.
அவர் ஏன் வந்தார்? முதல்படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்த கோபமாக இருக்கலாமோ, ஆனால் மனிதர் ஏதோ சொல்ல வந்திருக்கின்றார். அதாவது எங்களை மீறி இங்கு எந்த அந்நிய சினிமா விழாவும் சாத்தியமில்லை என சொல்ல வந்திருக்கலாம்.
ரஜினி விரைவில் மோடியுடன் டிபன், சிவசேனா தலைவருடன் லன்ச், மும்பை முதல்வருடன் டின்னர் சாப்பிடும் நாள் தொலைவில் இல்லை
சல்மானுக்கு எப்படி பதிலடி கொடுக்கலாம்?
இதற்கெல்லாம் ஒரே ஒரு நடிகர்தான் தமிழகத்தில் பதில் சொல்லமுடியும், விரைவில் அவர் திரைப்பட விழா மும்பையில் நடக்காமல் இதற்கொரு பதிலடி கொடுக்கமுடியாது
அவர் யார்?
நிச்சயமாக நமது சிம்பு
சிம்பு இங்குள்ள சல்மான் கான், சல்மான் அங்குள்ள சிம்பு.
இருவரையும் சந்திக்கவிட்டால் சூப்பர் ஹிட் கதை அங்குதான் கிடைக்கும்.
No comments:
Post a Comment