Thursday, November 17, 2016

பண மாற்றம் அமைதியாகத்தானே நடக்கிறது....

இந்தியாவில் எத்தனை கலவரம் வெடித்தது, எத்தனையாயிரம் பலிகள் நடந்திருக்கின்றன‌


எல்லை பிரிவினை, காஷ்மீர், பொற்கோயில் கலவரம், சஞ்சய்காந்தி அழிச்சாட்டியம், இந்திரா கொலைக்கு பின் டெல்லி கலவரம், போபால் விபத்து, ராஜிவோடு 17 பேர் பலி, பத்ம்நாபா படுகொலை பாபர் மசூதி இடிப்பும் கலவரம், மும்பை கலவரம், மும்பை குண்டுவெடிப்பு என பெரும் வரிசை.


இந்தி எதிர்ப்பு என தூண்டிவிடபட்டு செத்தது 67 பேர்.




மிசா காலத்தில் நடந்த மரணங்கள் என்ன?


ஈழத்தில் மட்டும் உயிர்விட்ட இந்திய ராணுவத்தார் 1500.


கும்பகோண மகாமகத்தில் நெரிசலில் சிக்கியவர் என்ன வகை?


மிக இளவயதில் எம்ஜிஆர் செத்ததும் தீக்குளித்தது எத்தனைபேர்?


கட்டடம், தீ, மவுலிபாக்கம் என எத்தனை ஆயிரம் சாவுகள்


அவ்வளவு ஏன் வனக்காவலன் வீரப்பனால் காட்டில் கொள்ளையடிக்கபோய் செத்த காவலர்கள் 150 பேர் பலி.


தமிழகத்தில் மட்டும் கொடியன்குளம், வாச்சாத்தி என‌ எவ்வளவோ நடந்திருக்கின்றது, இந்தியா முழுக்க சொன்னால் பட்டியல் தாங்காது, பூலன் தேவி நடத்திய அதிரடிகள் ஒன்றே போதும்.


மனதை தொட்டு சொல்லுங்கள் இவை எல்லாம் மோடி ஆட்சி செய்யும்பொழுது நடந்ததா?


இவற்றை எல்லாம் மறைத்துவிட்டுதான் கரன்சி நோட்டு பிரச்சினையில் பலபேர் மோடியால் கொல்லபட்டு கொண்டிருக்கின்றார்கள், இந்தியா அழிகின்றது , பொதுமக்கள் சாகின்றார்கள் என வஞ்சகமாக பதிவிட்டு கொண்டிருக்கின்றார்கள்.



No comments:

Post a Comment