முதற்படம் புலிகள், அடுத்தபடம் பூனைகள்
பிடல் காஸ்ட்ரோ மறைந்ததிலிருந்து உலகின் பார்வை கியூபா மீது குவிந்திருக்கின்றது
காரணம் மற்ற தலைவர்கள் மறைவதற்கும், அமெரிக்க எதிர்ப்பு தலைவர்கள் மறைவதற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு
செல்வசெழிப்பாக இருந்த ஈராகும், லிபியாவும் இன்று சுடுகாடாய் கிடக்கின்றன, ஓரளவு எழும்பி வந்த வெனிசுலாவும் நாசமாய் சீரழிந்து கிடக்கின்றது
இவைகள் மூவற்றிற்கும் உள்ள ஒற்றுமை இவற்றின் முன்னாள் ஆட்சியாளர்களான சதாம், கடாபி, சாவேஸ் மூவரும் அமெரிக்க எதிர்ப்பார்ளர்கள், அவர்கள் வீழ்ந்த பின் அந்த தேசங்களை அமெரிக்கா வதைப்பது கொஞ்சமல்ல.
அப்படித்தான் செய்வார்கள், இந்த வலியில் அந்த உன்னத தலைவர்களை மக்கள் எப்படி நினைப்பார்கள், அவர்களுக்காக நினைத்து நினைத்து அழுவார்கள், பெரும் தியாகி ஆவார்கள் என்றெல்லாம் எண்ணாமல் வதைப்பார்கள்
மக்களோ அந்த பொற்காலத்தை எண்ணி எண்ணி தலையில் அடித்து அழுவார்கள், அழுது கொண்டிருக்கின்றார்கள்
அமெரிக்காவினை எதிர்த்த தேசங்கள் நிலை அப்படி
சதாமோ, லிபியா கடாபியா அமெரிக்காவினை முறைத்தவர்கள், சவால் விட்டவர்கள் ஆனால் காஸ்ட்ரோ அமெரிக்காவின் முகத்தில் அறைந்து கழுத்தினை நெறித்தவர்
இன்று அவரும் இல்லை
ஆக கியூபர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை காலம் தான் சொல்லும், ஆனால் கியூப மக்களுக்கு அவர் பெரும் வழி காட்டிவிட்டுத்தன் சென்றிருக்கின்றார், கியூப மக்களும் வரலாற்றை படைத்தவர்கள் என்பதால் பெரும் சிக்கல் இருக்காது
எனினும் உலகம் உற்றுபார்த்தபடியே இருக்கின்றது
கென்னடி செய்யாதை நான் செய்வேன் என அரியணை ஏறும் ட்ரம்ப் வேறு "காஸ்ட்ரோ" சர்வாதிகாரி என கரித்துகொட்டிகொண்டிருக்கின்றார்
காலம் பதில் சொல்லட்டும்
தேவர் மகனில் சிவாஜி சொல்வார் "எல்லா பயவுள்ளையும் ஒரு நாளைக்கு சாகவேண்டியதேன், ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையின வாழ்ந்துட்டு போகுறதுதான் சாவுக்கே பெரும"
காஸ்ட்ரோவின் வாழ்வும், மரணமும் பெருமைப்டதக்கது
கியூப மக்கள் கொடுத்து வைத்தவர்கள் சேவும் காஸ்ட்ரோவும் கிடைத்தார்கள்
தமிழக மக்களுக்கு புரட்சி தலைவனும், கலைஞரும்தான் கிடைத்தார்கள்
No comments:
Post a Comment