ஒரு நடிகை இறந்திருக்கின்றாள், நடிப்பை தவிர அவளுக்கு மறுப்பக்கமும் இருந்திருக்கும், அதனை பற்றி யாரும் சொன்னதாக தெரியவில்லை
ஜோதிலட்சுமி
ஒரு பத்திரிகை சரோஜாதேவி பத்திரிகையினை மிஞ்சும் அளவு ஆபாசமாக எழுதிகொண்டிருக்கின்றது, இன்னும் வர இருக்கும் பத்திரிகைகளை நினைத்தால் பகீர் என்கிறது
அப்பொழுதும் கவனமாக ஜெயலலிதாவுடன் சேர்ந்து ஆடியவர் என்பதனை மறைத்து சிலர் எழுதிகொண்டிருக்கின்றார்கள், என்ன செய்ய சசிகலா புஷ்பா நினைவில் வந்திருப்பார்.
நாமெல்லாம் சில்க் ஸ்மிதா தலைமுறை என்பதால், அந்த இடம் நம்மை பொறுத்தவரை என்றேன்றும் அந்த ஆசியாவின் மர்லின் மன்றோவிற்கே
ஜோதிலட்சுமி அருமையான நடிகையும் கூட, அண்ணாமலை சீரியலில் மிக பிரமாதமாக நடித்திருந்தார், அதனை எல்லாம் யாரும் சொல்வதாக தெரியவில்லை
எந்த திறமையாளர் எனினும் சினிமா ஒரு முத்திரை குத்திவிட்டால் அதில் அதனை தாண்டமுடியாது என்பது யதார்த்தம்
அதில் அலுப்படைந்து இறந்தவர் சிலுக்கு ஸ்மிதா. முடிந்த வரை இறுதிவரை நின்றவர் ஜோதிலட்சுமி,
அந்த மன உறுதியினை சொல்வார்கள் என்றால், உடல் உறுதியினை புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment