Wednesday, August 10, 2016

தமிழகத்தில் ஓடும் ரயிலில் கொள்ளை...


தமிழகத்தில் முதல் முறையாக ஓடும் ரயிலில் கொள்ளை நடந்துவிட்டதாம், ஊடகங்கள் பொங்குகின்றன, ஆனால் உலகில் என்ன நடந்திருக்கின்றது?


உலகின் மிக பிரபலமான கொள்ளை இன்றுவரை இங்கிலாந்தில் நடந்த ஓடும் ரயிலில் நடந்த தங்க கொள்ளை, 22 மே 1855ல் நடந்த பிரமாண்ட கொள்ளை அது


Stanley Rajan's photo.


ஒரு கொள்ளை எப்படி அடிக்கபடவேண்டும் , எப்படி திட்டமிட வேண்டும் என்பதற்கு இன்றுவரை அகராதியாக திகழும் சம்பவம் அது.


அதாவது ரயிலின் ஒரு பெட்டியில் தங்கம் கொண்டு செல்லபடும், ரயில் புறப்பட 5 நிமிடம் முன்னால்தான் காவலோடு ஏற்படும், சீல் வைக்கபட்டு ரயில் கிளம்பும், இறங்குமிடமும் கடும் காவல் ரயில் நிற்காது, ஒரே வீக்னஸ் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் இது இணைக்கபட்டிருக்கும்


அதன் லாக்கரில் 4 சாவிகள் வசதி உண்டு, பிரமாண்ட லாக்கர் அது, உருவாக்கவே 2 வருடம் ஆனது. உடைப்பதோ, தூக்குவதோ சாத்தியமே இல்லை


சாவிகள் இன்றி திறக்கமுடியாது, 4 சாவிகளும் ஒரே நேரத்தில் செலுத்தபடவேண்டும்.







Stanley Rajan's photo.

 





ஒரு சேர 4 அதிகாரிகள் திறப்பார்கள், தங்கம் நிரப்பபட்டு சீல் வைக்கபடும், பின் சேருமிடத்தில் அதுபோல் 4 அதிகாரிகள் காவல் சூழ திறப்பார்கள். 4 சாவிகளும் 4 இடங்களில் பாதுகாப்பாக இருக்கும்.


உச்சமாக ஒரு அதிகாரி கழுத்திலே சாவி தொங்கவிட்டிருப்பது யாருக்கும் தெரியாது, 4ம் சாவி இடம் மாறி மாறி பாதுகாக்கபடும்.


இதில் எப்படி கொள்ளை சாத்தியம்??


ஒரு பெரும் கில்லாடி திட்டமிட்டான், ஒரு விலை மாது உட்பட 3 பேரை சேர்த்துகொண்டான், 4 சாவிகளையும் கடும் பாதுகாப்பிலும் தந்திரமாக நுழைந்து நகல் எடுத்தான். ஒரு முறை ஒத்திகையும் பார்த்தான், எல்லாம் டைமிங் ஒத்திகை,


எப்படி 4 சாவி நகல் எடுத்தான், எப்படி செய்தான் என்பதெல்லாம் மயிர் கூச்செறியும் விஷயங்கள், எழுதினால் தாங்காது. ஆனால் அட்டகாசமான வில்லன், நம்ம ஊர் திருடர்கள் எல்லாம் சும்மா.


கொஞ்சம் உளறிய ஒரு கூட்டாளியினை கொன்றும் போட்டான்


எப்படி ஒத்திகை பார்த்தான் என்றால், பிணபெட்டியில் பிணமாக ரயிலேறி படுத்துகொண்ட கில்லாடி அவன்.


rail


ஒரு சுபநாளில் கொள்ளையிட திட்டமிட்டான், எல்லாம் சரி, அவனும் அவளும் ரயில் ஏறினர். நடு வழியில் ரயில்பெட்டி மேல் நடந்து சிறிய துளை வழியாக இறங்கி லாக்கரை திறந்து தங்கத்தை எடுத்துவிட்டு, மிக சரியாக கூட்டாளி நிற்க சொன்ன இடத்தில் எறிந்துவிட்டு சாதுர்யமாக வந்து அமர்ந்தும் கொண்டான், டைமிங்


லண்டனே அலறியது, பிரிட்டன் அவமானத்தில் சிவந்தது, ஸ்காட்லாந்து யார்டு களமிறங்கியது, என்ன பெரிய கில்லாடி என்றாலும் ஒரு விஷயத்தில் மாட்டுவான் அல்லவா? அவன் மறந்தது என்ன? அது புகை வண்டி. ரயில்பெட்டி மேல் இவன் திறமை காட்டியபொழுது உடலெல்லாம் கரி அப்பி கொண்டது, அது முகத்திலும் இருந்தது, சிலர் கவனித்ததை போலிசிடம் சொன்னார்கள்


அவ்வளவுதான் எல்லா பயணிகள் வந்தவர்கள், போனவர்கள் எல்லோரையும் சோதித்து குற்றவாளியியில் ஒருவனை பிடித்தார்கள், அவன் மூலவரை காடிவிட்டான். அவர் அடுத்த காப்பி கடையில் காபி குடித்தபொழுது பிடித்தார்கள்


அவன் லண்டனில் மகா பிரபலமானான், இப்படி ஒரு கில்லாடியா என அவனை கோர்ட்டில் ஆஜர் படுத்தியபொழுது பார்க்க அடுத்த நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் விசா வாங்கி வந்தார்கள். லண்டன் கண்ட பெரும் கூட்டத்தில் அதுவும் ஒன்று


கோர்ட்டில் அவன் கொடுத்த வாக்குமூலத்தில் அரண்டு போய் இருந்தது நீதிமன்றம், இப்படியும் ஒருவன் திட்டமிட முடியுமா? இவ்வளவு நுட்பமா? என வியந்தார்கள்


நமது நாட்டில் இப்படி ஒரு அறிவாளியா என சிலர் காலரை தூக்கிகொண்டார்கள்.


அவன் பக்க்கத்து கல்லறை தோட்டத்தில் கல்லறையில் தங்கத்தை புதைத்து வைத்ததாக சொல்லிவிட்டு வெளிவந்தான், ஒரு பெண் வாயில் முத்தம் கொடுத்தாள், அவள் அதே விலைமாது


முத்தம் கொடுத்தவள் வாய்க்குள் ஒரு பின்னை செலுத்திவிட்டு சென்றதை யாரும் கவனிக்கவில்லை, அந்நாளைய குதிரை வண்டி காவலில் செல்லும்பொழுது அந்த பின்னை வைத்து கை விலங்கினை திறந்து
தப்பினான் அவன்.


அதன் பின் அவனையும் காணவில்லை, அவளையும் காணவில்லை ,


பெரும்பான்மை தங்கத்தையும் காணவில்லை, உலகிலே கொள்ளையிட்டு அகபபட்டால் எப்படி மீதி தங்கத்தோடு தப்பி என்ன செய்யவேண்டும், என திட்டமிட்ட முதல் கொள்ளையன் அவனே, அவ்வளவு எச்சரிக்கை அவனுக்கு.


இன்று வரை உலகின் சுவாரஸ்யமான கொள்ளை அது, உலகறிவுள்ள திருடர்களுக்கெல்லாம் அவனே குரு, துர் ஆத்மா, வழிகாட்டி எல்லாம், அப்படி ஒரு திறமையான திருடன் இனி பிறக்க வாய்ப்பில்லை என்கின்றார்கள், பெரும் கொள்ளையர்கள் அவன் ஆளுயர படத்தினை வைத்து ரகசியமாக வணங்குவர் என்பார்கள்


இப்பொழுது என்ன நடந்திருக்கின்றது, சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் அதே போல 340 கோடி ரூபாய் ஓடும் ரயிலில் கொள்ளையடிக்கபட்டிருக்கின்றது, தமிழ்நாடு அலறுகின்றது


இங்கிலாந்து கொள்ளையில் ஸ்காட்லாண்டு யார்டு தன்னை யார் என நிரூபித்தது, இதில் தமிழக போலிஸ் எப்படி தன்னை நிருபிக்கின்றது என பார்க்கலாம்


மகா சுவாரஸ்யமான கொள்ளை இது, குற்றவாளிகள் பிடிபடும்பொழுதுதான் உண்மை தெரியும், இப்பொழுதெல்லாம் குற்றவாளிக கழுத்தினை அறுத்துகொள்கின்றார்களாம், ஆனாலும் ஒரு விவர வட்டம் வெளிவரும்


நமது அவதானிப்பு எல்லாம் விரைவில் இதனை மையமாக வைத்து பல திரைப்படம் வரும், விடுவார்களா சினிமாக்காரர்கள்? சூர்யாவினை வைத்து ஒரு திருட்டுபடம் எடுத்தால் முடிந்துவிடும்.


இன்றைய 570கோடி கண்டெய்னர் விவகாரத்தை 21 ஆண்டுகளுக்கும் முன்பே சினிமா எடுத்த தமிழகம் இது, இந்த ரயிலை விடுமா? சும்மாவே ரயில் சென்டிமென்ட் ஜாஸ்தியான தமிழ் சினிமா இது. இனி வரிசையாக வரும்


நாம் இப்படி யோசித்தால் வெள்ளையன் எப்படி யொசிப்பான், அந்த ரயில் கொள்ளையினை வைத்து பல படம் வந்தாயிற்று "The Great Train Roberry " அதில் ஒன்று,


இது போக ஏகபட்ட நாவல்களும் வந்தது, டைட்டானிக் மூழ்கும் வரை இதுதான் பெரும் விற்பனை பொருள்


காரணம் கொள்ளையன் மக்களை அதிசயிக்க வைத்தது அப்படி, மனதிற்குள் மக்கள் ரசித்தார்கள். ஒரு கட்டத்தில் அவன் தாடியும் உடையும் கூட பேஷனாகிபோனது


அதன் பின் எத்தனையோ ஓடும் ரயில் கொள்ளை மேற்குலகில் நடந்தாலும் இன்று வரை போலிசாரே வாசித்து மலைத்து நிற்பது இந்த முதல் பிரமாண்ட ரயில்கொள்ளையே, அந்த எட்வர்ட் போலிசாருக்கே பல்கலை கழகமாக ஆகி இருக்கின்றான்


எப்படியோ இந்தியா பின் தங்கிய நாடுதான், அவர்கள் 1855ல் நிகழ்த்திய கொள்ளை சாதனையினை நாம் 161 வருடம் கழித்து நிறைவேற்றி இருக்கின்றோம், எவ்வளவு காலம் பின் தங்கிவிட்டோம்


சரி அந்த கொள்ளையினை கண்டுபிடித்து பெரும் புகழ் பெற்றது ஸ்காட்லாந்து யார்டு, காரணம் கொள்ளையன் எட்வர்ட் விதைதிருந்த மர்மம் அப்படி, ஒவ்வொன்றாக அவிழ்த்து அவனை நெருங்கினார்கள், அந்த கரி மட்டும் முகத்தில் இல்லை என்றால் நிச்சயம் ஸ்காட்லாண்ட் போலிஸ் முகத்தில் கரிதான்


நமது தமிழக போலிஸ் எப்படி என பார்க்கலாம், இங்கு என்ன நடக்கும் என நினைக்கின்றீர்கள்? வழக்கு ரயில்வே போலிசா அல்லது மாநில போலிசா, சிபிசிஐடியா, சிபிஐ யா? என ஒப்படைப்பதற்கும் 340 கோடி எங்கோ சென்றுவிடும்


அது என்னமோ வங்கிகளுக்கு சோதனையான காலம், மல்லையா மொத்தமாக கம்பி நீட்டிவிட்டார், 570 கோடி நடுதெருவில் கிடக்கின்றது, இதோ ரயிலில் வந்ததும் போனது இனி என்ன செய்ய?


எவனாவது விவசாயி கறவை மாடு கடனோ அல்லது பாவபட்டவன் வீட்டுலோனோ, அல்லது விதவை நகை கடனோ வாங்கி இருப்பாள், இல்லாவிட்டால் கல்வி கடனை அம்பானி போல இன்னொருவனிடம் ஒப்படைத்து வசூலிக்கலாம், எவன் செத்தால் என்ன? 4 பில்லை கூட்டிபோட்டால் முடிந்தது விஷயம்


எனினும் தமிழக கொள்ளையர்கள் அந்த எட்வர்ட்டை வணங்கிவிட்டு வந்தார்களா இல்லையா என தெரியாது, ஆனால் அவனை பின்பற்றி இருந்தால் இவர்களை நெருங்க கூட முடியாது


எமபாதகன் எனும் சொல்லுக்கு முற்றிலும் பொருந்தியவன் அந்த கொள்ளையர் நூலகம் எட்வர்ட் எனும் ஜெகஜால கில்லாடி.



No comments:

Post a Comment