Thursday, August 25, 2016

சிதறல்கள்




திருச்சி சிவா மீது அதிமுக பெண் எம்பிக்கள் சம்பந்தமாக புகார்கள் அதிகரிப்பு

இவ்விஷயத்தில் அவர்கள் "கட்டுப்பாடு" என்பது ஊர் அறிந்தது, "கண்ணியம்" அக்கட்சியின் பல தலைவர்கள் வாழ்ந்து சொன்னதுதான்.

ஆனால் "கடமை"க்காக கூட இன்னும் தலைவர் வாய் திறக்காதது ஆச்சரியம்


ஆக கடமை, கண்ணியம். கட்டுபாடு வாழ்க‌





எனக்கு பதவி கொடுத்தது கடவுள் தான் ஜெயலலிதா இல்லை - சசிகலா புஷ்பா


தூத்துகுடி நகராட்சி தலைவராக கடவுள்தான் கொடுத்தாரா? வாக்களித்த மக்கள் இல்லையா?, உருவாக்கிய மக்கள் வாயில் மண்ணா?. அன்று தேர்ந்தெடுத்தது கடவுளா? அல்லது மக்களா?


கடவுள் கொடுத்த பதவி என்றால், நாடாளுமன்றம் எதற்கு?கடவுள் கொடுத்த பதவி என்றால் கடவுளுக்கு சேவை செய்வதல்லவா முறை?




திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போட்டு பஜனை பாடி மணியாட்டவேண்டும் அல்லவா? இதனை பற்றி எல்லாம் நாம் கேட்க கூடாது


ஆனால் ஏதோ ஒரு "தெய்வம்" இவரை இயக்கிகொண்டிருக்கின்றது என்பது மட்டும் மறைமுகமாக தெரிகின்றது



No comments:

Post a Comment