இந்த உலகில் சமீபத்தில் கேள்விபட்ட மிக நல்ல விஷயம் நேற்று துபாய் விமான நிலையத்தில் 300 பேர் உயிர் காப்பாற்றபட்ட சம்பவம்
நிச்சயம் இது பெரும் பரபரப்பான விஷயம், காரணம் விமானம் தரையிரங்கும்போது சிக்கல் என்றால் கும்பலாக சென்று சேரவேண்டியதுதான்
மிகபெரும் விபத்து எனினும் ஒரே ஒரு தீயணைப்பு படை வீரரை தவிர எல்லோரும் காப்பாற்றபட்டிருக்கின்றார்கள்
இது பெரும் அதிசயமும் கூட தீப்பிடித்தபின் இத்தனைபேர் காப்பாற்றபட முதல் விஷயம் துபாய் மீட்புகுழுவினர் காட்டிய வேகமான மீட்பு பணி, உலகமே பாராட்டிகொண்டிருக்கின்றது
தீ எதற்கும் தாமதிக்காது, அதற்குள்ளாக மீட்டிருக்கின்றார்கள் என்றால் அது பெரும் வேகமான மீட்புபணி
எப்படியோ பெரும் சோக செய்தியிலிருந்து உலகம் காப்பாற்றபட்டிருக்கின்றது
ஒரு தீயணைப்பு வீரர் உயிரழந்துள்ளார், அவரை தேசத்தின் மானம் காத்த மாவீரன் என துபாய் அரசு உயர்த்தி அஞ்சலி செலுத்துகின்றது
No comments:
Post a Comment