Thursday, August 4, 2016

எண்ணை விலை என்ன விலையானாலும் நமக்கு என்ன ?

அப்படி ஒரு நிலை வரும் என முன்பே சொன்னார்கள், அரேபிய நாடுகளில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கபடலாம் எனும் அந்த செய்தி முன்பே வந்தது

காரணம் உலகபொருளாதாரம் சரியும் பொழுதே அது கணிக்கபட்டது, இப்படி சரிந்தால் எண்ணெய் விலை சரியும் என 2011களிலே கணிக்கபட்டது,

அரபுநாடுகள் எண்ணெய் உற்பத்தி எனும் ஒற்றை சக்தியில் வாழ்த்துகொண்டிருப்பவை, அதுதான அவற்றின் வசதியான வாழ்வுக்கு பெரும் ஆதாரம், இல்லாவிட்டால் பேரீச்சம் பழம் வாங்க யாரும் அவ்வளவு தூரம் செல்லமாட்டார்கள்


எண்ணெய்விலை சரியும்பொழுதே உற்பத்தியினை குறைக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருந்தது, அதனைத்தான் செய்திருக்கவேண்டும். உற்பத்தி குறைந்தால் ஓரளவு விலை கட்டுபாட்டில் இருந்திருக்கும்

ஆனால் சவுதியும், குவைத்தும் இதில் அடாவடி பார்ட்டிகள் அல்லது அமெரிக அடிமைகள்.

ஒரு பேரல் 110 டாலருக்கு விற்ற இடத்தில் 40 டாலருக்கு குறைந்தது, சவுதியும் குவைத்தும் என்ன செய்தன? ஒரு பேரல் விற்கவேண்டிய இடத்தில் 3 பேரல்கள் விற்று கணக்கினை சரி செய்ய பார்த்தன, ஆனால் அது இன்னும் விலை வீழ்ச்சியினை காட்டிற்று

1990ல் இம்மாதிரியான நடவடிக்கையில் குவைத் இறங்க, சதாம் கண்டித்தும் பலனில்லை, சல்லி காசுக்கு விற்றுகொண்டிருந்தார்கள். சதாம் குவைத்தில் பாய காரணமே அதுதான்

இன்னும் திருந்தியபாடில்லை , சந்தடி சாக்கில் கோமேனி மீது ஆணயாக அணுகுண்டு தயாரிக்கமாட்டோம் என சொல்லிவிட்டு தடை நீக்கி எண்ணெய் வியாபாரத்தில் வந்திருக்கும் ஈரானும் அள்ளி விடுகின்றது

எண்ணெய்விலை குறைவால் முதலில் பாதிக்கபட்ட நாடு ரஷ்யா, ஆனாலும் தாங்கி பிடித்து நிற்கின்றது
அவர்களுக்கென்ன ஆயுதபலமாவது உண்டு, செயற்கைகோள் வியாபாரம் உண்டு

ஆனால் முதலில் சீரழிந்தநாடு வெனிசுலா, மறைந்த சாவேஸ் சதாம் உசேன் போலவே எண்ணெய் வியாபாரத்தை சீராக்கி மக்களை வாழ்விக்க எடுத்த முயற்சிகள் கொஞ்சமல்ல, அவரும் மறைந்தார், வெனிசுலா பாழாகிவிட்டது

அரபுநாடுகள் தங்களிடம் உள்ள அந்நிய செலாவணியில் தாக்குபிடித்தன, இப்பொழுது கொஞ்சம் தள்ளாட தொடங்கிவிட்டன‌

அதன் எதிரொலிதான் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் கைவிடபட்ட நிலையில் சவுதியில் திகைத்து நிற்பது

இப்படி ஒரு நிலை வரும் என எச்சரித்தவர்கள் சதாம், சாவேஸ் அதன் பின் பயங்கரவாதி என்றாலும் அந்த ஓசாமா பின்லேடன்.

எண்ணெய் உலகம் பல மர்ம அரசியலை கொண்டது, இதனை கண்டிப்பவர்கள் இல்லாமல் போவார்கள், அல்லது அடிமை ஆனவர்கள் தப்பிகொள்வார்கள்

இப்போது பாதிக்கபட்டிருப்பது வெனிசுலா மக்களும், அரேபிய அந்நிய தொழிலாளர்களும்

ஆனால் அரேபிய இந்திய தொழிலாளர்களை காப்பதில் இந்திய அரசு திறமையாக செயலாற்றுகின்றது, முதற்கட்டமாக 2500 இந்தியர்களை பராமரித்து திருப்பி அனுப்ப சவுதி ஒப்புகொண்டிருக்கின்றது.

எண்ணெய்விலை குறைந்தாலே இப்படி அலறும் அரேபிய நாடுகள், நாளை பெட்ரோலுக்கு மாற்றுவழி கண்டுபிடிக்கபட்டால் என்ன ஆகும்? சரி அது அவர்கள் பிரச்சினை

உலகில் இப்படி பல நாடுகள் கலக்கத்தில் இருக்கல், இதில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று, ஏகபட்ட லாபம். பின்னர் ஏன் பெட்ரோல் விலை குறைக்கவில்லை என்றால் என்ன விலை விற்றாலும் மக்களால் வாங்க முடிகிறது அல்லவா? போதும் இந்த லாபத்தால் தேசிய‌ நிதி ஏறுகிறது என்பார்கள்.

ஏறட்டும்

No comments:

Post a Comment