Wednesday, August 17, 2016

வைகுண்டராஜனுக்கு முகநூலில் கடிதம்

"பெருந்தலைவர் காமராஜர்" அவர்களின் சமூகத்தில் வந்த அண்ணாச்சி அவர்கள் இந்த 2 திராவிட கட்சிகளுக்கும் ஆதரவு கொடுக்காமல் தனித்துவத்தை காண்பிக்கும்விதமாக தென் மாவட்டத்தின் நாடார் சமுதாயத்தின் ஒட்டு மொத்த மக்களின் ஆதரவோடு "புதியதாக கட்சி" ஒன்றை தொடங்குங்கள்

FB_IMG_1471404017975

இல்லையெனில் 'நாம் தமிழர் சீமானை" முன்னிலைப்படுத்தி வேகமெடுங்கள் அப்புறம் பார்க்கலாம் உங்களை யார் நெருங்குவது என்று .

காமராஜர் இறந்தபின்பு அவருடைய நினைவாக காலில் செருப்பு கூட அணியாமல் வாழும் உங்களை பின்தொடர நாடார் சமூகம் தயார் ஆகவே விரைவில் முடிவெடுங்கள். கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதி நீங்கள் எவரிடமும் அடிபணிந்து காரியம் சாதிக்கவேண்டாம் சமுதாயத்தையும், சமுதாய மக்களையும் மேலும் அரவணையுங்கள் புது வழி பிறக்கும்"

மேற்கண்டவாறு தாதுமணல் வைகுண்டராஜனுக்கு ஒருவர் முகநூலில் கடிதம் எழுதுகின்றார்.

இவர் நிச்சயம் அதிமுக உளவாளியாகவோ அல்லது மணல் ஆலையால் பாதிக்கபட்டவராகத்தான் இருக்கமுடியும்.

அவர் கட்சி நடத்துவது இரண்டாம் விஷயம், ஆனால் சீமானின் "நாம் தமிழரை" நாடார் கட்சியாக கொண்டுவரமுடியுமா? இது நடக்கின்ற காரியமா? அன்னார் பிரபாகரன் படத்தோடு கம்புசுத்தும்போது பிடித்து உள்ளே போட எவ்வளவு நேரமாகும்

சரி அப்படத்தினை கீழே வைத்தால், பாரிஸ் தம்பிகள் தற்கொலைபடை அனுப்ப மாட்டார்களா?

இவர் ஒருவேளை காங்கிரஸ்காரராக இருப்பாரோ? சீமானை இப்படி கோர்த்துவிடுகின்றார்? சும்மாவே அடிவாங்கிகொண்டிருக்கும் சீமான், நாடார்களுக்காக கட்சி என்றால் தொலைத்துவிட மாட்டார்களா?

எதற்கும் வைகுண்டராஜன் தரப்பு கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, தேரினை இழுத்து தெருவில் விட பார்க்கின்றார்ர்கள்,

நாம் சொல்லவருவது எல்லாம் ஒன்றுதான், முன்பு இப்படித்தான் சிவந்தி ஆதித்தனை ஏற்றிவிட்டார்கள், அதன் பின் அவரை அம்போ என விட்டுவிட்டு இவர் பின் வந்திருக்கின்றார்கள்.

நாளை இவரை அரோகரா என விட்டுவிட்டு இன்னொருவர் பின்சென்று ம்ம் கட்சிதொடங்குங்கள் என உசுப்பேத்திவிடுவார்கள்.

கோடீஸ்வரர்கள் ஏன் கட்சி நடத்தவேண்டும்?, நாட்டில் நடந்துகொண்டிருக்கும் கட்சிகள் எல்லாம் கோடீஸ்வரர்கள் நலனுக்காக மட்டும் என்பதை கூட தெரியாதவரா அண்ணாச்ச்சி

என்ன செய்வது? சாதி அரசியலை தவிர ஒன்றும் தெரியாதவர்கள், அதை சொல்லி அவரை சுரண்ட நினைப்பவர்கள் அவரை ஏற்றிவிடலாம்

ஆனால் முன்பு சொன்ன ரயில் ஹீரோ எட்வர்டை விட பெரும் ஜெகஜால கில்லாடி அண்ணாச்சி, அவருக்கா தெரியாது?

No comments:

Post a Comment