Friday, August 26, 2016

மறுபடியும் திருமால் புராணம்...

திருமால் பற்றி சொன்னால் தேவநேய பாவணர் என்ன சொன்னார் தெரியுமா? கபாடபுரம் தெரியுமா? ஏய் இனதுரோகி திருமால் தமிழ்கடவுள், முருகன் தமிழ்கடவுள் சீமான் சொன்னது சரி என சிலர் மூக்கி சீந்திகொண்டிருக்கின்றார்கள்

கபாடபுரம் என்று நீங்கள் ஒரு கதை சொன்னால், அட்லாண்டிக் கண்டம் என கிரேக்கம் ஒரு கதை சொல்லும் அதாவது மனிதன் உருவான இடம் கடலுக்குள் கிடக்கின்றது எனும் முடிவு அது.

ஆனால் ஆதிமனிதன் ஆப்ரிக்காவில் உருவாகி இருக்கலாம் என்றும் ஒரு தியரி உண்டு, ஆப்ரிக்க தமிழக உறவுகள் உருவம் வரை வரக்கூடியவை, சரி அதனை விடுங்கள்


தமிழ் என்பது ஒரு மொழிகுடும்பத்தை சேர்ந்தது, தெலுங்கு,கன்னடம், மலையாளம், தமிழ் எல்லாம் ஒரு மொழியில் இருந்து பிரிந்திருக்கலாம் மாறாக தமிழிலிருந்து அவை பிரிந்திருக்கமுடியாது என்பதும் ஒரு கருத்து,

பொதுவாக புலவர்கள் பொய்யர்கள், அன்றிலிருந்தே அப்படித்தான், காசு கொடுத்தால் மன்னா உன்னை கேட்டுத்தான் சூரியன் உதிக்கும், நீ உறங்கினால் அது உறங்கும் என எழுதுவார்கள்

அப்படி ஒரு புலவன் கல்தோன்றி மண்தோன்றா என எழுதினால் அதனையே பிடித்து தொங்குவீர்களா?, தேவநேய பாவணார் என்ன நோபல் பரிசு பெற்றவரா? உலகம் முழுக்க அலசி முடிவுகண்டாரா?, சரி அது வேறு விஷயம்

கடவுளில் என்னடா தமிழ் கடவுள், அரேபிய கடவுள், ஐரோப்பா கடவுள்?

முருகன் யார்? நன்றாய் பாருங்கள், ஆசியாவெங்கும் பரவி இருந்த இந்துமத தெய்வம் அவர், இன்றும் மங்கோலியாவில் மயில்மேல் ஈட்டி ஏந்தி அமர்ந்திருக்கும் தெய்வம் உண்டு, அப்படியானால் அவர் என்ன மங்கோலிய கடவுளா?

இயமமலையிலிருந்து பழநி வந்தவர்தான் அவர் என சொல்கிறது வரலாறு. மறுக்கமுடியுமா? சொல்லபோனால் உங்கள் பாஷைபடி வந்தேறிதான்

சிவன் இருப்பது கயிலாய மலை, திருமால் இருப்பது பாற்கடல் அப்படி அவர்கள் எல்லாம் உலகிற்கே பொதுவான விஷயம் அய்யா

அவர்களை பிடித்து கு..ஞ்சி முதல் ..லை வரை உள்ள தமிழர் நிலத்தின் கடவுளாய் அடைக்கமுடியுமா? காற்றை கையில் பிடிக்க முடியுமா?

உலகிலே 5 வகை நிலம் தமிழனிடம் மட்டும்தான் உள்ளதா?

தொல்காப்பியன் எழுதிவிட்டானாம், சரி அவன் குரு அகத்தியன் யார்? இமயமலையிலிருந்து வந்த வந்தேறி அல்லவா?

மானிட நேயத்தில்தான் அவன் இங்கு வந்து தமிழ் வளர்த்திருக்கின்றான், தொல்காப்பியனுக்கு கற்பித்திருக்கின்றான்

அவன் உயரம் குள்ளம், ஆனால் பெரும் விலாசமான மனது

உங்களுக்கோ மனது மிக குறுகிய மனது, எல்லாம் தமிழ் , தமிழன் என பார்க்கும் குறுகிய வட்டம். நிச்சயம் அகத்தியன் ஆவி இதற்காக சிவனிடம் அழுது புலம்பி இருக்கும்

கடவுள் எனும் சக்தி மனிதனை கடந்து, பிரபஞ்சத்தை கடந்தது

அதனை தமிழ் கடவுள், ஆங்கில கடவுள் என பிரித்து பார்ப்பீர்களானால் என்ன சொல்ல‌

சீமான் அப்படி சொல்லாவிட்டால்தான் ஆச்சரியம், காரணம் அவரின் பிறண்ட மனநிலை அப்படி.

நீங்களும் அப்படியே தொடர்வீர்களானால் உங்களையும் உலகம் அந்த பட்டியலில்தான் வைக்கும்

தமிழ்கடவுள் சொர்க்கத்தில் உண்டோ இல்லையோ தமிழகத்தை நரகமாக்கும் பொறுப்பினை மட்டும் நீங்கள் ஏற்றிருக்கின்றீர்கள்.

ஆனால் பீஸ்போன பல்புகள் ஒளிர்வதில்லை. இங்கோ மெயின் பவர் வரை புடுங்கியாகிவிட்டது

கடவுளுக்கு ஏதடா மொழியும் இனமும்.

No comments:

Post a Comment