இந்த Z டிவி நாட்டாமை குழு எங்கு போய் தொலைந்தது, பாதிக்கபட்ட பெண்களுக்கு நாங்கள் இருக்கின்றோம், வாருங்கள் எங்கள் பின்னால் தமிழ்நாடு இருக்கின்றது, "போலீச கூட்டுவேன்..." என்றெல்லாம் பஞ்சாயத்து பண்ணிய புண்ணியவதிகள் எங்கே?
எவ்வளவு அழகான விறுவிறுப்பான விஷயம் சிக்கி இருக்கின்றது?, ஏன் தாமதம்? என்ன தயக்கம்? எங்கே நாட்டாமைகள்?
நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி கதறுகின்றார், இன்னும் அதிரடியாக லோக்சபா எம்பி சத்தியபாமா மீது அவரது கணவரே திருச்சி சிவாவினை சம்பத்தபடுத்தி அறிக்கை விடுகின்றார்.
இதில் இந்த Z டிவி, சொலவதெல்லாம் உணமை நிகழ்ச்சி நடத்தி இந்த பக்கம் சசிகலா புஷ்பா, சத்யபாமா வகையறாக்களை நிறுத்தி அப்பக்கம் திருச்சி சிவாவினை வைத்து மிரட்டி ஒரு நிகழ்ச்சி நடத்தினால் எப்படி இருக்கும்?
சசிகலா புஷ்பாவிடம் "சொல்லுங்கம்மா..தமிழ்நாடு உங்க பின்னால இருக்கு, நாங்க இருக்கோம், முதல்வர் அடிச்சாராம்மா..? இப்படி கேட்டால் எப்படி இருக்கும்?
செய்வார்களா? ம்ஹூம், அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஏழை பாழைகளின் அந்தரங்கத்தை வியாபாரமாக்குவது, இந்த பெரிய விவகாரங்களுக்குள் எல்லாம் வரமாட்டார்கள்
"என்னம்மா இப்படி பண்ணதீங்கம்மா..................." இது சீ டிவி.
அய்யா கோபிநாத், திருச்சி சிவா, சத்யபாமா புருஷன ஒரு பக்கமும், சசிகலா புஷ்பா கும்பலை இன்னொரு பக்கமும் வைத்து நீயா, நானா நிகழ்ச்சி நடத்தினால் எப்படி இருக்கும்?
கோட் போட்டு ஸ்டைலா நடந்து , கேள்வி கேட்டு...
ம்ஹூம் நீங்களும் செய்யமாட்டீர்கள்?
பாண்டே என்பவர் இவர்களில் ஒருவரை பிடித்து கேள்வி கேட்டால் எப்படி இருக்கும்? அவரும் செய்யமாட்டார்
நியூஸ் 7 சேணல், சீமான் கொழும்புக்கு போனதை எப்படி ஒளிபரப்பியது, திருச்சி சிவா டெல்லியில் என்ன செய்தார் என்பதை சொல்லுமா? ம்ஹூம் , புதிய தலைமுறை நோ, பாலிமர் நோ நோ, இன்னும் இருக்கும் இம்சைகள் நெவர்.
ஆக இதுதான் தமிழக ஊடக சுதந்திரம் எனும் வியாபார தந்திரம்
No comments:
Post a Comment