Thursday, August 11, 2016

இதுதான் விதி, இதுதான் கர்ம பலன்

நாத்திக வாதம் உச்சத்திலிருந்தபொழுது விதி என்றால் என்ன?, கர்மா என்றால் என்ன? விளக்கமுடியுமா என காஞ்சி பெரியவருக்கு சவால் விட்டார்கள், அவரும் ஏற்றுகொண்டார்


சவாலுக்குரியவர்களை அழைத்துகொண்டு மருத்துவமனை சென்றார், அங்கே இரு குழந்தைகளை காட்டினார், ஒரே நாளில் பிறந்த குழந்தைகள்.


ஒன்று பணக்கார குடும்பத்தில் பிறந்து பொன்னும் மணியும் பூட்டி வெள்ளிதொட்டிலில் ஆடிகொண்டிருந்தது, இன்னொன்று ஏழை குடும்பத்தில் பிறந்து கனகமணியோடு பாயில் படுத்திருந்தது




இரண்டும் ஒரே பச்சிளம் குழந்தைகள் அல்லவா?, ஒன்று பொன்னில் புரள அது உழைத்ததா? இன்னொன்று வறுமையில் பிறக்க என்ன அழித்ததா? இதுதான் விதி, இதுதான் கர்ம பலன் என்றார் பெரியவர்


அப்படி ஒரு மறைந்த நடிகையின் வாழ்க்கையினை புரட்டினால், அவரும் ஒரு நடிகையும் ஒன்றாக வந்திருக்கின்றார்கள், ஒன்றாக ஆடியிருக்கின்றார்கள், இருவருமே சினிமா நடிகைகள் , இருவரும் ஒன்றாக கூட ஆடியிருக்கும் ஆட்டக்காரர்கள்


ஆனால் பின்னாளில் ஒருவர் அரசியல் வானில் ஜொலிக்கின்றார் அதிரடியாக ஆள்கிறார், இன்னொருவர் அதே குத்தாட்ட நடிகை முத்திரையொடு மறைந்தும் விட்டார்.


இதுதான் விதி, இதுதான் கர்ம பலன்


சில விஷயங்களை நம்ப பல உதாரணங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.



No comments:

Post a Comment