Saturday, August 27, 2016

வட , தென் கொரியா....

இன்றைய உலகில் அழிச்சாட்டிய சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடு வடகொரியா, கொரிப்பதற்கு அரைபடி நெல் கூட இல்லா பரதேசி கோலம்தான். ஆனால் என்றோ சிக்கிவிட்ட அரைகுறை ஏவுகனை, அக்கால அணுகுண்டு தொழில்நுட்பத்தினை கொண்டு உலகினை மிரட்டிகொண்டிருக்கின்றது


நமது ஊர்களிலும் சில ரவுடிகளை பார்க்கலாம், ஏய் சைக்கிள் செயின் இருக்கு, பெட்ரோல் பாம் இருக்கு, பிளேடு இருக்கு எடு பணத்தினை என்றால் இவனிடம் வம்பு எதற்கு என கொடுத்துவிட்டு ஒதுங்குவோம் அல்லவா, பணம் கிடைத்ததும் ரவுடியும் குடித்துவிட்டு மல்லாக்க கிடப்பான்




அப்படி அப்பகுதிநாடுகளை மிரட்டி ஏதோ வசூல் செய்துகொண்டிருக்கிறது நாடு, ஆனால் ஒருநாள் மண்டை பிளப்பு நிச்சயம்.


அவர்களுக்கும் தென் கொரியாவிற்கும் ஆகாது, ம்ம் இந்த நொடி சண்டை வெடிக்கவில்லை, அடுத்தநொடி தெரியாது எனும் அளவிற்கு கடும் பகை. இதில் ஒலிம்பிக் வேறு வந்தால் எப்படி இருக்கும்?


வட கொரியா தன் சவாலாக தென் கொரியாவினை கருதிற்று, பயிற்சிகளை எல்லாம் கொடுத்து நீங்கள் தென் கொரியர்களை விட ஒரு அலுமினிய பதக்கம் கூடுதலாக வாங்கவேண்டும் என துப்பாக்கி முனையில் சத்தியம் வாங்கி அனுப்பி வைத்தது


தென் கொரியா அமெரிக்க புட்டிப்பாலில் வளரும் அமுல் பேபி, கொஞ்சம் ஊட்டமான பொருளாதாரம், நல்ல பயிற்சி


தென்கொரியாவிற்கு 9 தங்கம் உட்பட 21 பதக்கங்களை குவித்தது, வடகொரிய வீரர்கள் மரணபயத்தில் 2 தங்கம் உட்பட 7 பதக்கம் குவித்தனர்


உணவோ, மருந்தோ அரிதான வடகொரியாவிலிருந்து வந்து அவர்கள் இந்த 7 பெற்றதே பெரும் விஷயம், அதில் இரு தங்கம் வேறு, நமது தேசமென்றால் எப்படி கொண்டாடியிருப்போம்.


ஆனால் வடகொரிய அதிபருக்கு ஆத்திரம் வந்தது, தென் கொரியாவினை வெல்லமுடியாத நீங்கள் இனி குடிமக்களா என பொங்கி தீர்த்து ரேஷன் கார்டினை பறிமுதல் செய்தார், இனி அந்த தோற்ற‌ வீரர்கள் எல்லாம் சுரங்கத்தில் கூலிவேலை செய்யவேண்டுமாம், ஆம் இனி அவர்கள் அரசு அடிமைகள்


இது நாட்டில் அமைதியான சலசலப்பினை உண்டு பண்ணியிருக்கின்றது, இனி யார் விளையாட வருவார்? . ராணுவத்தாரோ இனி யுத்தம் என வந்து தோற்கும் நிலை வந்தால் எதிரிநாட்டு விரன் பின்னால் ஓடிவிடவேண்டும் என மனதிற்குள் உருக தொடங்கிவிட்டார்கள்.


பாவம் வடகொரியர்கள் அதிமுக எம் எல் ஏக்களை விட அவர்கள் நிலை மகா மோசம், ஆகவே அதிமுகவினரே வடகொரியரை பார்த்து ஆனந்தம் கொண்டு உங்கள் கண்களை துடைத்து கொள்ளுங்கள்.


மோடி அரசின் சில சர்ச்சையான அமைச்சர்கள், நடிகை ரம்யாவினை வழக்கு போட்டு தாக்குபவர்கள் போன்றவர்கள் பிரதமராக இருந்து, பாகிஸ்தான் கூடுதலாக சில பதக்கம் வாங்கியிருந்தால் இந்திய வீரர்கள் நிலை சிக்கல்தான் நல்லவளையாக இரண்டும் நடக்கவில்லை


சீமான் போன்றோர் முதல்வராக இருந்து, தமிழக வீரர்கள் சிங்களினிடம் தோற்றாலும் சிக்கல், அதுவும் நடக்கவில்லை


இப்படி சில விஷயங்கள் நடக்காமல் இருக்கும் வரை நல்லது, பச்சமுத்துவிற்கு இன்னும் வராத கடும் நெஞ்சுவலி போல‌



No comments:

Post a Comment