Wednesday, August 31, 2016

நாட்டியத்திற்கு பத்மினி...

அழகான பழம் சினிமா பாடல்களை பார்த்துகொண்டிருந்தேன், பத்மினி பாடல்கள். சும்மா சொல்லகூடாது மனுஷி அந்த பரத முனிவரும் எழுந்து கைதட்டும் வண்ணம் அற்புதமான நடன கலைஞர்.

முகங்களில் அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டுவந்து, மிக நளினமாக ஆடியிருக்கின்றார், கேரளத்து ஒவியத்திற்கு ரவிவர்மன் அடையாளம் என்றால் நாட்டியத்திற்கு பத்மினி

வியட்நாம் வீடுபாடலும் வந்தது, சிவாஜி பத்மினி ஜொடி அற்புதமாக பொருந்துகின்றது, மிக சில ஜோடிகளே அப்படி பொருந்தும் கமல் ஜெயப்பிரதா போல‌

நிறைய பாடல் வந்தது, தில்லானா மோகனம்பாள் அதில் கிளாசிக். சிவாஜிகணேசன் அற்புதமாக கலக்கினார். அந்த முகத்தில்தான் நொடிக்கொரு நடிப்பு, கண்களே உணர்ச்சிகளை வெளிப்படுத்தின, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்கள் இப்ப்டித்தான் இருந்திருப்பார்கள் என காண வைத்த தோற்றம் அது.

அடுத்த பாடல் வந்தது, பத்மினி அற்புதமாக ஆடிகொண்டிருந்தார், அருகே அந்த கொடுமை நடந்தது

ஆம், தலைவெட்டிய சேவல் போல ராமச்சந்திரன் எனும் நடிகன் குதித்துகொண்டிருந்தார். சுற்றுகிறார், தாவுகிறார் என்னென்னமொ செயகிறார், முகத்தில் மட்டும் வெற்றி புன்னகை

அப்படி என்ன ஆடிவிட்டார் என அந்த புன்னகை என தெரியவில்லை. ஆனால் அவருக்கு நகைச்சுவை காட்சி நன்றாக வரும் என்பது அப்பொழுதுதான் தெரிந்தது.

இன்றுவரை தமிழ் சினிமாவில் நம்பர் 1 நகைச்சுவை காட்சி அதுதான்.

முடிவில் சினிமா இலக்கணபடியே அவர் வென்றும் விட்டார், டைரக்டருக்கு கொஞ்சமேனும் மனசாட்சி என்பதே இல்லை போலிருக்கின்றது.

அதன் பின் வேறுபாடல்களுக்கு வந்துவிட்டேன்,

இப்பொழுது பவர்ஸ்டார் அழகாக ஆடிகொண்டிருக்கின்றார்.

No comments:

Post a Comment