Monday, August 29, 2016

ராதிகா மகள் திருமணம் ....

ராதிகா மகள் திருமணம் என இந்த பத்திரிகைகள் எல்லாம் செய்யும் அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை, பயங்கர இம்சைகள்.


இதில் சில பத்திரிகைகள் ராதிகா-சரத்குமார் மகள் திருமணம் எனும் அளவில் பிய்த்து எழுதிகொண்டிருக்கின்றன, பிரபலங்கள் எல்லாம் வாழ்த்தினார்களாம். அதில் முன்னாள் நடிகர் சங்க தலைவரும், இந்நாள் நடிகர் சங்க தலைவரும் வந்ததாக தெரியவில்லை,


ஒருவேளை அவர்கள் பிரபலம் இல்லாதவர்களாக இருக்கலாம்.





என்ன பிரபலங்களோ தெரியவில்லை, விஜயகுமார் மகன் போதையில் கார் ஓட்டி போலிசாரிடமே மோதியிருக்கின்றார். அவரை பற்றியும் அடுத்த தகவல் இல்லை, வரவும் வராது. அவர் பிரபலம் அல்லவா? இந்திய சட்டம் எல்லாம் செல்லாது.

இதே இன்னொரு ஏழை இப்படி போதையில் சிக்கி இருந்தால் கொலைமுயற்சி என சொல்லி காவல்துறை கடமையினை நிலை நாட்டி இருக்கும்.

இந்த திருமணத்தின் மகா முக்கிய பிரபலமான, மணப்பெண்ணின் தந்தை ரிச்சர்டு கலந்துகொண்டாரா இல்லையா? வாழ்த்து அனுப்பினாரா இல்லையா?, தந்தை சார்பில் யாருமில்லா திருமணமா இது?

மணப்பெண் தந்தையினை ஆசிவாங்க தேடினாரா இல்லையா? என்பது பற்றி எல்லாம் ஊடகத்தார் பேசமாட்டார்கள், நாமும் பேசகூடாது.





கொசுறு :


"பெண்களை அசிங்கப்படுத்தாதீர்கள். கள்ங்கப்படுத்தாதீர்கள், நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. எந்த கட்சியாகவும் இயக்கங்கள், தலைவராகவும் இருந்தாலும் தானாக இயங்க வேண்டும்.


சூரியன் தானாக இயங்குகிறது.


பின்னால் ஒருவர் இருந்து இயக்க கூடாது. பின்னால் இருந்து இயக்குபவர் பெயரை கேட்டால் நன்மை இருக்காது. அது கட்சிக்காரர்களுக்கும் சரி என்னை போன்ற பெண்களுக்கும் சரி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் " : சசிகலா புஷ்பா மதுரையில் சீற்றம்




ஆக என் பின்னால் ஒருவரும் இல்லை, இல்லை என இவராக சொல்வதுதான் ஏதோ குறிப்பால் உணர்த்துகின்றது , இவர் பின்னால் ஒரு "மண்ணும்" இல்லை என நம்பி தொலைப்போம்


அது சரி புஷ்பாக்கா ஐம்பெரும் பூதம் எல்லாம் இருக்க, "சூரியன் தானாக இயங்குகின்றது" என ஏன் குறிப்பிட்டு சொல்லவேண்டும், தமிழகத்தில் சூரியன் என்றால் என்ன, யாரை குறிக்கும் என்பது எல்லோருக்கும் புரியும் :)


சரி ஏதோ நடக்கபோகின்றது, அங்கே ஒரு சகோதரன் பேட்டி கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல,


எப்படியோ தலைவன் கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால் ம்ம்ம்ம்.. ஸ்டர்ட் மியூசிக்



No comments:

Post a Comment