Thursday, August 4, 2016

நீங்க குத்துங்க எஜமான்.. குத்துங்க‌...

நீ காமராஜரின் சாதி, அதனால் உனக்கு மற்ற சாதிகளை பிடிப்பதில்லை, எல்லா சாதிகளையும் சாடுகின்றாய் , முதுகுளத்தூர் கலவரத்தை பற்றி என்ன தெரியும் உனக்கு சாதி வெறியன் நீ என்கிறார்கள், கடுமையான சாடல்கள்

எதற்கு சாலியமங்களம் தலித்பெண் படுகொலைக்கு கண்டித்ததை, என்ன சொன்னேன்?, அன்று காமராஜர் அரசு தாழ்த்தபட்ட மக்களுக்கு காவலாய் இருந்தது என்று. இதுதான் தவறாம்.

நீங்கள் ஆண்ட சாதியோ, அடிமை சாதியோ அந்த பெருமை பேசிகொண்டே இருங்கள், அல்லது அடிமை தளை உடைப்பு, மேட்டுகுடி கூப்பாடு என சொல்லிகொண்டே இருங்கள்

நான் ஆண்ட சாதி என்றெல்லாம் பெருமை பேசவுமில்ல‌, அடிமை சாதி என்றும் அழவுமில்லை, நான் மானிட சாதி குறிப்பாக உழைக்கும் சாதி

உழைப்பு ஒன்றே உயர்வு என நம்பும் சாதி, அது சோழ மன்னனின் அரண்மனையோ, பாண்டிய மன்னன் காலமோ உழைப்பு உழைப்பு என வாழந்த சாதி

நாயக்கர் காலத்திலும் தேரிகாட்டு பனைமரமோ அல்லது வறண்ட பூமியோ, அல்லது ஆடுமாடுகளுடனோ கிடைத்த வாய்ப்பில் பிழைக்க போராடிய சாதி, உழைக்க தயங்கா சாதி.

இந்தியா கிழக்கிந்திய கம்பெனியினை விட்டு பிரிட்டன் அரசுக்கு கைமாறிய பின்னர் இந்தியாவில் வாய்ப்புகள் மாறின, கல்வி எல்லோருக்கும் கிடைத்தது, அதிலும் படிக்க ஆரம்பித்த சாதி

சொந்தமாக நிலமில்லை, உழைக்க வழி இல்லை எனினும் மாட்டுவண்டி கட்டி சிவகாசி முதல் திருவனந்தபுரம் வரை சந்தைகளை உருவாக்கி ஓடி ஓடி உழைத்த சாதி

விவசாயம் வீழ்ச்சி என நாயக்கன் நிலங்களை 1930களிலே போட்டுகொண்டு ஓடியபொழுதே, விவசாயத்தில் இறங்கி உழைத்து பார்த்த சாதி

சுதந்திர இந்தியாவில் உழைக்கும் வாய்ப்புகள் கூடின, அது உழைத்தது, பெட்டி கடை முதல் பத்திரிகை வரை எதிலெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அது சம்பாதித்தது

என்றாவது நாங்கள் அடக்கிவைக்கபட்ட சாதி என அது அழுது பார்த்தீற்களா?

எங்காவது அது அரசுக்கு கோரிக்கை வைத்து புலம்பி கண்டீர்களா?

மிக பிற்படுத்தபட்ட‌ வரிசையில் தன்னை சேர்க்கவில்லை என ஒரு போராட்டம் எனும் பெயரில் ஒரு சுள்ளியினை கொழுத்தியிருக்கும், மரம் வெட்டி போராட கிளம்பி இருக்கும்.

கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டும் என போராடி இருக்கும்? தனக்கு தானே கல்வி நிலையங்கள் கட்டிகொண்டது அது.

ஆனானபட்ட நாயக்கன் அரசாளும்போது, இன்று ஆண்ட இனம் என மார்தட்டும் இனம் அவனிடம் அடியாளாய், கூலியாளய் கைகட்டி நின்றபொழுது

போடா.... என சொல்லிவிட்டு உழைப்பால் வாழ ஆரம்பித்த இனம்.

அதாவது அனாதையாக நடுதெருவில் நின்றபொழுதே இருப்பதை வைத்து உழைத்து வாழ எத்தணித்த இனம்.

இன்றும் அது அப்படித்தான் அரசிடம் ஒன்றும் அது எதிர்பார்ப்பதில்லை, வீண் கூப்பாடுகளோ பெருமையோ அதனிடம் இல்லை, உழைக்கும் உழைக்கும் உழைத்துகொண்டே இருக்கும்

அப்படி உலகில் அதற்கொரு சமமான இனம் உண்டென்றால் அது யூத இனமே,
அது உலகில் எந்த மூலையில் விட்டாலும் பிழைத்துகொள்ளும் சாமர்த்தியமான இனம், உழைப்பில் மகா உன்னதமான இனம்.

இருவருக்கும் உழைப்பில் ஒரு வித்தியாசமும் காணமுடியாது, ஆனால் அறிவியலில் அவர்கள் ஒரு படி அல்ல ஒன்பது படி மேல்

இந்த உழைக்கும் சாதி சென்னையில் மும்பையில் டெல்லியில், கொழும்பில், மலேசியாவில், சிங்கப்பூரில், லண்டனில், அமெரிக்காவில் என அது உழைத்து உழைத்து உயர்ந்திருக்கின்றது

ஆக சாதி பெருமை அல்லது ஒடுக்கபட்ட சாதி என மோதுபவர்களுக்கெல்லாம் நான் சொல்வது அதுதான், உழையுங்கள் வாய்ப்பு இருக்குமிடமெல்லாம் உழையுங்கள், அது போதும், இந்த உலகம் திறந்து கிடக்கின்றது

என்ன சாதியாய் இருந்தால் என்ன? உழைக்கும் சாதியாய் இருங்கள், அது உயர்த்தும். உதாரணம் கலைஞர் கருணாநிதி, நெருங்க முடியுமா?

வெறும் பெட்ரோல் போடும் சிறுவனாக இருந்த அம்பானி எப்படி இந்திய பணக்காரனாக முடிந்தது, டாட்டாவின் 150 ஆண்டுகால உழைப்பினை அவனால் வெறும் 20 ஆண்டுகளில் தொடமுடிந்தது, எல்லாம் உழைப்பு.

இன்று சென்னை தி.நகரோ கடற்கரை நிலையங்களோ அந்த அயரா உழைப்பில் உருவானவை. நாங்கள் ஆண்ட பரம்பரை வேலை செய்யமாட்டோம் என சும்மா இருந்திருந்தால் வருமா?

அல்லது இது பார்பணிய இந்தியா என திண்ணையில் தூங்கினால் வருமா?

உழைக்கவேண்டும் ஒரு நாளைக்கு 20 மணிநேரம் உழைக்கவேண்டும் இதிலென்ன உங்களுக்கு வெறுப்பு?

நேற்று தலித் பெண்ணுக்கு பாதுகாப்பில்லை என கதறினார்கள், கத்தினார்கள்.

காமராஜர் ஆட்சியில் தலித் மக்கள் கொல்லபட்ட முதுகுளத்தூர் கலவரத்தில் அமைதி நிலைநாட்ட கடும் நடவடிக்கை எடுத்தார் என அன்றைய நிலையினை சொன்னது குற்றமா?

இது வோட்டு அரசியலை பாதிக்கும் என அவர் அமைதியாக இருக்காமல் நடவடிக்கை எடுத்தாரா இல்லையா?

இதனை சொன்னால்............

வழக்கம்போல ஈழ, திராவிட தலித், இஸ்லாமிய, இந்து,மோடி, பிரிவினை கிறிஸ்தவ எதிர்ப்பாளர் வரிசையில் முக்குலத்தோர் எதிர்ப்பாளன் எனும் முத்திரையும் குத்துகின்றார்கள்.

குத்துங்க எஜமான் குத்துங்க..இந்த முகநூல்காரங்களே இப்படித்த்தான்

ஜாதி,மொழி, மத வெறியனுக..

நீங்க குத்துங்க எஜமான் குத்துங்க‌




"நான் சாதியற்றவன். என்னை ஒரு சாதிக்குள் அடைத்துப்பார்க்கவேண்டாம். சாதியற்றவன் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன்" : இயக்குநர் ரஞ்சித்

மனிதர் இயக்குநர் மட்டுமல்ல, மகா நடிகரும் கூட. இரண்டு நாளைக்கு முன்புவரை கூட பெரும் புரட்சிபேசிகொண்டிருந்தவர் இன்றோ அந்தரத்தில் பல்டி அடித்துவிட்டார்

சூர்யாபடம் அவசரமாக பறிக்கபட்டதிலும், மற்ற தயாரிப்பாளர்கள் ஒதுங்கி செல்வதிலும், இன்னும் பலவிதமான சினிமா நிலவரங்களும் அவருக்கு ஞானத்தை வழங்கி இருக்கலாம்


இதனை அன்றே சொல்லி இருந்தால் இவர் மீது என்ன சர்ச்சை வந்திருக்கும்? அனுபவமே சிறந்த ஆசான்

அன்றே நாம் சொன்னது போல ஒன்று இவர் மாறுவார் இல்லது இவரின் கொள்கை மாறும். இதோ இரண்டாவது நடந்துவிட்டது

ஒரு நல்ல இயக்குநரை உசுப்பிவிட்டு சரிக்க பார்த்தவர்கள், பாதி சரித்தவர்கள் இனியாவது அமைதிகாப்பார்கள் என்றா நினைக்கின்றீர்கள்??

இதோ இப்பொழுதே இங்கு பொங்குவார்கள் பாருங்கள்

No comments:

Post a Comment