Friday, August 26, 2016

கொந்தளிப்பு... திருட்டு ... ஏமாற்று... ஆவேசம்....

தேசிய கொடி எரித்தவரும், சுவாதி கொலையில் ஆதாரமில்லாமல் காவல்துறையினரை விமர்சித்து வந்த திலீபன் மகேந்திரன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் தமிழச்சி என்பர் கடுமையாக கொந்தளித்திருக்கின்றார்





உலகத் தமிழர்களே! இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அவர் சொன்னபடி உலக தமிழராகிய நாங்கள், சமீபகாலமாக தீவிரவாதத்தால் பாதிக்கபட்டுவரும் பிரான்ஸ் நாட்டில் , கடும் நடவடிக்கை எடுத்துவரும் பிரான்ஸ் காவல்துறையினரிடம் அதே கோரிக்கையினை வைக்கின்றோம்

பிரான்ஸ் போலிசாரே, நீங்கள் ஏதாவது செய்யுங்கள் அல்லது தமிழ்நாட்டிற்கு பார்சல் பண்ணுங்கள்

போதுமா தமிழச்சி





"இலங்கை தமிழர்கள் செய்யும் திருட்டு சிடியால் பெரும் இழப்பு ஏற்படுகிறது , இவர்களுக்கு நாங்கள் எவ்வளவு குரல் எழுப்பினோம், அதை நினைத்தால் அருவெருப்பாக உள்ளது" : இயக்குநர் சேரன்


ஓஓஓ.. அவர்களுக்காக நீங்கள் திரையுலகினர் குரல் எழுப்புவீர்கள், அவர்கள் உங்கள் படங்களை ஐரோப்பாவில் ஓடவைத்து உங்களுக்கு சம்பாதித்து கொடுத்தால் சத்தமில்லை, தொடர்ந்து ஆதரிப்பீர்கள்


ஆனால் அவர்கள் திருட்டு விசிடி செய்து உங்கள் பிழைப்பினை கெடுத்தால் மண் அள்ளிபோடுவீர்கள்




மொத்தத்தில் இந்த தேசத்திற்கு எது சரி, யாரை ஆதரிக்கவேண்டும், யாரை ஆதரிக்க கூடாது என்பதல்ல உங்கள் நோக்கம், இந்த தேசம் எதிர்கொண்ட சவால் அல்ல உங்கள் நோக்கம், ஈழத்தில் இறந்த 1500 இந்திய வீரர்களை எல்லாம் நினைவுக்கு வராது அப்படித்தானே


இந்த அருவருப்பு அப்பொழுது அல்லவா வந்திருக்கவேண்டும், இப்பொழுது அந்த அருவருப்பு எங்களுக்கல்லவா வந்து தொலைகிறது


பணம் வந்தால் பொங்குவீர்கள், பொழப்பு கெட்டால் அது அருவருப்பு


தேசிய கீதம் என படமெடுத்தவர் தானே நீங்கள், இதுதானா அது? அதே தான் எங்களுக்கும் வருகின்றது,


அருவருப்பு











எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் இடமளிக்க மதன் என்பவர் பணம் வசூலித்த வழக்கில் பாரிவேந்தர் கைது

இந்த புதியதலைமுறை செய்தியில் கைது செய்தி வருமா என்று தெரியவில்லை, மற்ற டிவிக்களில் வரலாம். எனினும் ராமதாஸின் மக்கள் தொலைக்காட்சியில் இனி இன்றைய செய்தி எல்லாம் இதுதான். மனிதருக்கு ஏக சந்தோஷம்.

சரி ஒருவன் மருத்துவ கல்லூரியியில் இடமளிப்பதாக ஆசை காட்டி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார், பிடித்து போட்டாகிவிட்டது வாழ்த்துக்கள்.


இயேசுவினை காட்டுகிறேன், சிவனை காட்டுகிறேன் என வசூலிப்பவனை எப்போ அரெஸ்ட் பண்ண போறேள்ள்....

ஈழம் வாங்கிதாரேன்னு ஒருத்தன் ஐரோப்பாவுல கலெக்சன் பண்ணிட்டு சென்னை விருகம்பாக்கத்துல முருகன், திருமால் மீட்புண்ணு சுத்துறானே அவனை எப்போ அரெஸ்ட் பண்ண போறேள்....













தர்மதுரை படத்தின் டைட்டிலில் ராதிகா பெயரினை உரிய‌ மரியாதையாக போடாததால் சரத்குமார் ஆவேசம் சீனு ராமசாமி மீது குற்றசாட்டினார் என சர்ச்சை


சினிமா முதல் அரசியல் வரை எவ்வளவு நடந்தது, பாஜகவில் சேர்ந்த விஷயம் பத்திரிகைகளுக்கு செல்லும் முன்பே மறுபடி ஓடிவந்து கார்டனில் விழுந்ததென்ன?


திருச்செந்தூர் தேர்தலில் எப்படி மரியாதை கிடைத்தது, என்றாவது ராதிகா இதற்கெல்லாம் ஆவேசபட்டாரா அல்லது அதற்கு காரணமானவர்கள் மீது குற்றம் சாட்டினாரா?





ராதிகா கிரேட்



No comments:

Post a Comment