Sunday, August 28, 2016

தமிழக அணைகள்.....

 

கபினி அணை கட்டபட்டது 1974, ஹேமாவதி அணை கட்டபட்டது 1979 இன்னும் சிறிதும் பெரிதுமாக கன்னடம் அணை கட்டியிருப்பது 1970க்கு பின்புதான்


அதுவும் கபினியும், ஹேமாவதியும் காவேரியின் துணையாறுகள், தமிழகத்து பவானியும், நொய்யலும் போல, காவேரி அல்ல. காவேரி மீது கட்டவில்லை துணையாறுகள் மீதே என அது தந்திரமாக கிளம்பியதும், தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றபின்பே


அதாவது தமிழகத்தில் கழக ஆட்சிகள் அழிச்சாட்டியம் ஆரம்பித்த பின்னர்தான். அந்த தொடக்ககாலத்தில் கலைஞர் என்ன கிழித்தார் என சொன்னால், கொஞ்சமேனும் சிந்தனை இல்லாமல் பேசிகொண்டிருக்கின்றார்கள்





இதனை கூட தெரியாத சில பதர்கள்தான் காங்கிரஸ் காலத்தில் கன்னடன் அணை கட்டினான், கலைஞர் காலத்தில் அல்ல என பல்லவியினை மாற்றி பாடுகின்றன‌

இதில் கலைஞருக்கு குறையாத பங்கு எம்ஜிஆருக்கும் உண்டு, அவர் செய்த தவறை இவர் சரி செய்யவில்லை, இவரின் தவறை அவர் தொடவில்லை, அப்படியே தொடர்ந்தாகள்.

வரலாற்றினை மாற்றமுடியாது செம்பூத்து பறவை கூட்டமே, கொஞ்சமாவது படித்துவிட்டு பேசுங்கள், அல்லது சும்மா இருங்கள்,

அவரே இதுபற்றி கனத்த மவுனம் காக்கும்பொது, அவரை மென்மேலும் சிக்கலில் இழுத்துவிடுவது நீங்களே, அவரை காப்பாற்றுவதாக சொல்லி அவரையே அடித்துகொன்டிருக்கின்றீர்கள்.

அப்படி கலைஞர் பக்தி காட்டவேண்டுமானால், அறிவாலய கழிவறை சுவற்றில் வெள்ளை அடியுங்கள், வண்ணம் தீட்டுங்கள்

இந்த சுவரில் அல்ல.





தமிழக அணைகளை பற்றி சொன்னால், ஏய் திராவிட துரோகி, இலை பொறுக்கி, தமிழ்நாட்டில் கலைஞர் கட்டாத அணையா, அவர் இல்லை என்றால் ஒரு அணையுமில்லை என ஒப்பாரி வைக்க ஒரு கூட்டம் கிளம்பி இருக்கின்றது


மேட்டூர் அணை, முல்லை பெரியாறு அணை என சுதந்திரத்திற்கு முற்பட்ட அணைகள் குறிப்பிடதக்கவை. அதன் பின் கட்டபட்ட பரம்பிகுளம் ஆழியாறு, மணிமுத்தாறு, வைகை அணைகளும் குறிப்பிடதக்கவை.


அதன் பாசன பரப்பும், அது தேக்கி வைக்கும் நீரும் அப்படியானவை.


அதன் பின் திமுக கட்டியதெல்லாம் சுத்தமாக திட்டமிடாத, ஏதோ காண்டிராக்டருக்கு வேலைகொடுக்கவே ஆரம்பிக்கபட்ட அணைகள்


உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் நெல்லை மாவட்ட கொடுமுடியாறு அணையினை சொல்லலாம், அணை கட்டுவதற்கு முன்பு அப்பகுதி குளங்கள் நிரம்பிகொண்டுதான் இருந்தன, அணை கட்டியபின் என்னாயிற்று?


வந்து கொண்டிருக்கும் நீரை, அணை நிரம்பும் வரை குளங்களுக்கு நீர் இல்லை என அடைத்து கொள்வார்கள், எல்லா குளங்களும் காய்ந்து கிடக்கும், சரி இருக்கும் நீரை அனுப்புங்கள் என்றால் நோ..மழை வந்தால் மட்டும் திறப்போம் என்பார்கள்


மழை கொட்டினால் அணை திறக்காமலே குளங்களுக்கு நீர் ஓடி வந்து நிரம்பும், நீரை மறைக்கவா முடியும்? மழை கொட்டினால் அவ்வணையினை திறப்பார்கள், அது கடலுக்கு செல்லும்


சரி தேக்கி வைத்து கோடையில் தாருங்கள் என்றால் அணையின் நீர்மட்டம் பல்லை காட்டும், 10 லாரி தண்ணீர்தான் சேமிக்கமுடியும், அது குடிதண்ணீருக்கே போதாது


ஆக மழை வந்தால் திறந்துவிடவும், கோடைக்கு தேக்கி வைக்கமுடியாத அளவூ கொள்ளளவும் கொண்ட அணைகள் எதற்கு? மழை வந்தால் நிரம்பும் குளங்கள் பல நூறு வருட பாரம்பரியம் பொல தானாக நிரம்பிகொள்ளட்டம், இதற்கு ஏன் அணைகள்?


வைகையோ, காவிரி செழிக்கும் பட்சத்தில் மேட்டுரோ அதன் கொள்ளளவு அப்படி, அப்படி தேக்கலாம், அதன் தொலைநோக்கு பார்வை அப்படி.


பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளும் அப்படியே


அறவே திட்டமிடமால் அவசரமாக 4 காண்டிராக்டர் பிழைத்துகொள்ள அனுமதிக்கபட்ட அணைகள்தான் கலைஞர் அரசு கிழித்தது


ஆளாளுக்கு வந்து விளக்குகின்றார்களாம்


இவர்கள் ஒரு மாதிரியானவர்கள், யாராவது அதோ தெரிகிறது பார் கல்லணை, அதனை கட்டியது கலைஞர் என்றால் கொஞ்சமும் யோசிக்காமல், காவேரியினை தடுத்த கலைஞரின் ஆற்றல் பாரீர் என கொஞ்சமும் வெட்கபடாமல் சொல்லிகொள்வார்கள்


கலைஞரோ, புரட்சி தலைவனோ, தலைவியோ அல்லது பன்னீர் செல்வமோ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் மட்டுமல்ல, குட்டைக்கும் அணை கட்டி பிரச்சாரம் செய்யும் ஒரு மாதிரியான "தமாஷ்" பார்ட்டிகள்.

No comments:

Post a Comment