இந்தயாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குட்டைப் பாவடை அணியாதீர்கள் என்று மத்திய இணை மந்திரி மகேஷ் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.
ஆம், அவர்கள் எல்லோரும் நேர்ச்சை கட்டி, விரதம் இருந்தல்லவா இந்தியாவினை தரிசிக்க வருகின்றார்கள்?
இப்படிபட்ட அறிவிப்புகள் எல்லாம் மகா அவசியம்.
அவர்களின் பாதுகாப்பிற்காக இப்படி சொல்கிறாராம்.
இன்னும் அதிகமாக வெளிநாட்டு பெண்கள் முழுக்க மூடிவரவேண்டும் அல்லது மொட்டை அடித்து மகா பயங்கரமான கோலத்தில் வரவேண்டும் .
அப்பொழுதுதான் இனி இந்தியாவில் பாதுகாப்பு என சொன்னாலும் சொல்வார்.
பிரதமரோ இரண்டு இன்னிங்ஸாக உலகெல்லாம் சென்று எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என காலில் விழுந்து அழைக்கின்றார்.
இவரோ, அப்படி அணிய கூடாது, இப்படி அணிந்தால் எங்கள் நாட்டில் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு நாட்டு பெயரினை கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
சும்மாவே இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடில்லை என சர்ச்சை உண்டு.
இவரோ அதனை ஒப்புகொண்டபடி அறிக்கைவிட்டு கொண்டிருக்கின்றார்.
மோடிக்கு சனி நிச்சயமாக சாதக கட்டத்தில் வலுவாக இல்லை. அது நாடாளுமன்றத்தில் அவர் அருகிலே சம்மணம் போட்டு அமர்ந்திருக்கின்றது.
No comments:
Post a Comment