ஒரு தமிழர் ஒலிம்பிக்கில் விளையாடி இருக்கின்றார், அதுவும் ஈழதமிழர்.
அவர் பெயர் துளசி தர்மலிங்கம், ஜெர்மன் வாசி அப்படியும் கத்தார் அணிக்க்காக குத்துசண்டையில் களமிறங்கி இருக்கின்றார். மங்கோலிய வீரரிடம் தோல்வி தழுவி வெளியேறிவிட்டார்.
ஒரு தமிழன் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டிருக்கின்றார், ஆனால் தமிழக உணர்வாளர்களிடம் ஒரு சத்தமும் இல்லை, தமிழக ஊடகங்களிலும் ஒரு பெட்டி செய்தியும் காணோம்.
ஒரு தமிழின உணர்வாளர்களிடமிருந்து ஒரு வாழ்த்தையும் காணோம், ஒரு பாராட்டினையும் காணோம்.
இதுதான் இவர்கள் உலகெல்லாம் உள்ள தமிழர்களை எல்லாம் ஒன்று சேர்கின்றோம் என கத்தும் அழகு.
ஏன் இவரை மறந்தார்கள்? அவர் மங்கோலிய வீரருடன் மோதியதால் விட்டுவிட்டார்களோ?
ஒருவேளை அவர் இந்திய வீரர்களுடன் மோதி இருந்தால் தமிழக ஊடகங்களில் வந்திருப்பார், அங்கிள் சைமன் அவருக்கு போன வருடம் சோடா உடைத்துகொடுத்தது போல பேட்டி கொடுத்திருப்பார்
ஒருவேளை பதக்கம் வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? வைகோ ஒரு படம் வெளியிடுவார்.
வழக்கம் போல கலைஞர் தொடங்கி இருப்பார்
அவர் என்மீது வைத்த நம்பிக்கை அளப்பறியது, இறுதி யுத்த காலத்தில் அவர் எனக்கு விடுத்த கோரிக்கையும், நான் கண்ணீர் விட்டபொழுது அவர் சொன்ன வார்த்தைகளும் மறக்க கூடியதல்ல
தர்மலிங்கம் என் மீது வைத்திருக்கும் மரியாதை அபரிமிதமானது என்ற ரீதியில் இருந்திருக்கும்
No comments:
Post a Comment