Tuesday, August 30, 2016

கபாலி : பாகம் 2 ?

சந்தணத்தை பலமுறை பூசுவார்கள், சிலவற்றை இரண்டாம் முறை பூச அசாத்திய தைரியம் வேண்டும், அதிலொன்று கபாலி


கபாலி இரண்டாம் கதை எப்படியும் இருக்கட்டும், இரண்டாம் பாகம் எடுக்கபடுவதாக வரும் அறிவிப்பு சுவாரஸ்யமானது.


ரஜினி இளைய மகள் சவுந்தர்யா மூலம் எடுக்கப்ட்ட படம் கபாலி, அதனடுத்து ரஜினியின் வாழ்க்கை வரலாறை வேறு எடுப்பதாக சொல்லிகொண்டிருந்தார்,




இளையமகள் ஒரு படம் எடுத்தால் மூத்த மகளும் ஒன்று எடுக்கவேண்டும் அல்லவா?


இல்லை என்றால் என்ன மகள்கள் தந்தைக்கு ஆற்றிய உதவி?


மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தனுஷ் இருக்கும்போது அவரை மீறி எப்படி? மகள் எடுத்தால் என்ன? மருமகன் எடுததால் என்ன?, இதோ கபாலி இரண்டாம் பாகம் என தனுஷ் கிளம்பிவிட்டார்.


இவ்வளவு நாளும் ரஜினியினை அனுதினமும் பார்த்தவர்தான் தனுஷ், இபொழுது மட்டும் அவரை வைத்து தயாரிக்கும் ஆசை எங்கிருந்து வந்ததோ கபாலீஸ்வரனுக்கே வெளிச்சம்.


அதுவும் கபாலியினைத்தான் எடுக்கவேண்டும், அதுவும் ரஞ்சித் தான் இயக்கவேண்டும் என அடம்பிடிப்பது ஏன் என எனக்கு புரியவில்லை, உங்களுக்கு புரிந்தால் நல்லது.


ஒருவேளை முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பெரும் வெற்றியாக்கி பழிதுடைப்போம் என கிளம்பிவிட்டார்களோ தெரியாது, பொதுவாக ரஜினி படம் இரண்டாம் பாகம் வராது, அவர் விரும்புவதில்லை. இல்லையென்றால் எத்தனையோ படங்கள் முன்பே வந்திருக்கும்,


பாபாவிற்கு கூட வரவில்லை


ஆனால் பாபா கபாலி அளவு இம்சை இல்லை என்பதால் களங்கம் துடைக்க அவசியம் இல்லாமல் இருக்கலாம்.


சரி இவர்கள் ஏதும் செய்யட்டும், ஆனால் மலேசிய நிலை அவ்வளவு சுமூகமாக இல்லை, மலாய்மொழியில் ஓடவிடபட்ட கபாலி மொத்தமே 30 நிமிடங்கள்தான் ஓடுகின்றதாம், வன்முறை, குரோதம் என பலத்த ஆட்சேபனை. மலேசியாவில் கபாலி2 என்பது கொஞ்சம் சிரமத்திற்குரியது


ஆனால் சினிமாதானே மறுபடி ரஜினி சிறையிலிருந்து வெளிவந்து, ரவுடிசம் விட்டு தாய்லாந்து புத்தர் கோயிலில் சாமியாரா இருப்பது போல கதையினை அமைக்கலாம். ராதிகா ஆப்தே பற்றி வரும் செய்திகள் ரஜினி இமேஜூக்கு பொருத்தமாக இருக்காது என்பதால் மாலைபோட்டுவிடலாம்.


சாமியார் வேடத்தில் ரஜினி "விவேகானந்தர் காவி உடுத்தியதும் அரசியல், சில சாமியார்கள் காவி கழற்றியதும் அரசியல்.." என வசனங்களை எதிர்பார்க்கலாம்.


நிச்சயமாக புத்தர் பக்கம் அம்பேத்கர் படம் பல இடங்களில் வரும்,


சில இடங்களில் சாமியார் ரஜினி சுருட்டு குடிக்கலாம், ஏதும் யாரும் சொன்னால், "நான் சுருட்டு குடிக்கிறது உனக்கு பொறுகலண்ண்ணா குடிப்பேண்டா..., பார்க்க முடியலண்ணா சாவுடா..." என வசனம் வரலாம்.


எப்படியும் எடுக்கலாம் ஏதுவும் செய்யலாம். எது செய்தாலும் பார்க்க 4 பேர் ரெடி. காரணம் ரஜினி


மகள்களுக்காக இருமுறை ரஞ்சித்திடம் தன்னை பலிகொடுக்கும் ஒரு வகையான நிலை அவருக்கு


ஒரே ஒரு நிம்மதி என்னவென்றால், ரஜினிக்கு இரு மகள்கள் மட்டுமே, லதா ரஜினிகாந்திற்கு இப்படிபட்ட ஆசை வராமல் இருக்க அந்த இமயமலை பாபாவோ அல்லது ராகவேந்திரரோ அருள்புரியட்டும்.



No comments:

Post a Comment