Thursday, August 11, 2016

அணுவுலைதானே தொடங்கி கொள்ளுங்கள்...




அது என்ன மர்மமோ தெரியவில்லை, காங்கிரஸ் ஆட்சி என்றால் பொங்கிய கூடங்குளம் பகுதி, மோடி ஆட்சி என்றால் ஒரு சத்தமுமின்றி "அணுவுலைதானே தொடங்கி கொள்ளுங்கள்..." என அமைதியாகிவிடுகின்றது


கவனித்து பாருங்கள், ஈழமோ, அணுவுலையோ இல்லை வேறு அழிச்சாட்டியங்களோ காங்கிரஸ் மத்தியில் இருக்கும்போது இருக்கும் தமிழக வீரியம் பாஜக ஆட்சியில் இருக்காது


காங்கிரஸ் ஆரிய‌ பார்பண கட்சி என்றால், பாஜக என்ன கன்ஷிராம் கட்சியா? அல்ல, வேறு ஏதோ விஷயம் இருக்கின்றது, ஆனால் புரியாது விட்டுவிடலாம்.





அணு நிச்சயம் மகா ஆபத்தானது, அதற்கு எது மனிதன்? எது புல்? எது கால்நடை? என தெரியாது, ஒழித்துகட்டிவிடும்.

ஆனால் மனிதனுக்கு எது காங்கிரஸ், எது திமுக எது பாஜக, எது அதிமுக என்பதெல்லாம் நன்றாக தெரிகின்றது, ஆறறிவல்லவா?

விசித்திரமான உலகம் இது, எல்லா போராட்டங்களிலும் மக்களே பகடைக்காய்கள், ஆடுபவர்கள் யாரோ ஒரு சிலரே.

ஒன்று மட்டும் புரிகின்றது, வெள்ளையன் கால கோடீஸ்வரர்களின் கட்சி காங்கிரஸ், அந்த கோடீஸ்வரர்களை எதிர்த்து உருவான இன்றைய இந்திய தொழிலதிபர்களின் கட்சி பாஜக‌

ஆக இரண்டும் மில்லியனர்களின் கட்சியே, நாட்டில் நடக்கும் போராட்டங்களும், சில பிரச்சினைகளும் இந்த பழைய மற்றும் புதுபணக்காரர்களுக்கான போராட்டமே அன்றி வேறல்ல.

ஆண்டான் அடிமை பிரச்சினை சாதியில் மட்டுமல்ல, இந்திய தொழிலதிபர்களின் உலகத்திலும் நிரம்ப கிடக்கின்றது

அது தொழிற்சாலை, கல்வி, பத்திரிகை என எல்லா தளங்களிலும் மிக வெளிப்படையாகவே தெரிகின்றது







No comments:

Post a Comment