துறவி என்றால் அனைத்தையும் துறந்தவர், அவருக்கென்று ஏதும் சொந்தமாக வைத்திருக்காதவர்,
அக்காலத்தில் துறவி பட்டினத்தார் ஒரு திருவோடு வைத்திருந்தாராம் , இந்த ஓடும் நமக்கு சொந்தமோ, நாம் துறவி அல்லவா என்று அதனை தூற எறிந்தாராம்
ஞானத்துறவி என்றாலும் காவி உடையுன் நடையாய் பரதேசியாய் அலைந்தார் விவேகானந்தர்,
அவர் அமெரிக்கா செல்ல கலணா காசு இல்லா நிலையில் புதுகோட்டை மன்னர்தான் அனுப்பி வைத்தார்
அப்படிபட்ட துறவிகளை கண்ட நாடு இது, மதம் இது
இன்று பாருங்கள் நித்தியானந்தா இம்சை ஒருபுறம், இன்னொருவன் 200 ஏக்கர் குழுகுழு எஸ்டேட்டில் இருந்து கொண்டுதான் வருபவர்களுக்கு எல்லாம் ஞானப்பால் ஊற்றுகின்றாராம்.
இவர்களும் ஞானிகளாம், துறவிகளாம் இவர்களுக்கு கண்டிப்பாக பெண் சீடர்கள்தான் வேண்டுமாம்,
இது ஆன்மீகமா அல்லது "ஆண்"மீகமா? தெரியவில்லை
கோவணம் கூட இல்லாமல், காலூன்ற இடமின்றி அந்தரத்தில் செத்தார் இயேசு, இன்று கோர்ட் டை கட்டிகொண்டு சொந்தமாக பல்கலைகழகம் நடத்துபவன் அவரின் சீடனாம், ஊழியனாம்
இன்னும் எத்தனை ஜாக்கி, நித்தி, தினகர இம்சைகளை பார்க்கவேண்டுமோ தெரியவில்லை,
அந்த கல்கி அவதாரமோ அல்லது யூதர்கள் எதிர்பார்க்கும் தேவகுமாரனோ சீக்கிரம் வந்து தொலைந்தால்தான் என்ன?
No comments:
Post a Comment