Sunday, August 14, 2016

முகநூலில் கருத்து சுதந்திரம் ஆபத்தானது என்கிறார் தந்தி டிவி பாண்டே

முகநூல் தளங்களின் கருத்து சுதந்திரம் ஆபத்தானது என்கிறார் தந்தி டிவி பாண்டே.

FB_IMG_1471148987358

எப்படி? ஊடக சுதந்திரம் மிக சரியாக இருக்கிறது ஆபத்து இல்லை என்றால், முகநூல் சுதந்திரம் எப்படி ஆபத்தாகும்?

சீமானை இவர் வளர்த்துவிட்டதும், கேட்க வேண்டிய கேள்விகளை மிக தந்திரமாக மறைத்தபொழுது அவற்றை தோலுரித்து காட்டியது முகநூல் பதிவுகளே

வீரமணியினை கலாய்பதாக நினைத்துகொண்டு சில விஷ கருத்துக்களை சொன்னபொழுது அடித்துவெளுத்தது முகநூலே

இப்படி ஏராளமான விஷயங்களை சொல்லலாம்

பாண்டே மட்டும் அல்ல, தமிழகத்து எல்லா ஊடகங்களில் நிலையும் இப்படித்தான் இருக்கின்றது, ஒரு காலத்தில் சுதேச மித்திரன், அக்கால தினமணி என நாட்டுபற்று மிக்க
ஊடகங்கள் இருந்தன அவற்றிற்கொரு மதிப்பு இருந்தது. சில பத்திரிகைகள் சினிமாவினை கொண்டாட ஆரம்பித்த வியாபார சுயநல காலமுதல் அதன் மதிப்பு வீழ்ந்தது

அரசியல் அதில் கலக்க ஆரம்பித்தவுடன் அது சாக்கடை ஆயிற்று

இந்த விஞ்ஞான யுகத்தில் ஊடகங்கள் சேட்டிலைட் டிவிக்கள் ஆயின. அரசியல்,கல்வி கொள்ளையன் முதல் மணல் கொள்ளையன் வரை டிவி நடத்தும் காலமிது.

ஊடகம் என்பது பணக்கார வர்கத்தின் ஆயுதமான ஒரு காலமிது, அதாவது நாங்கள் நினைத்தால் செய்திகளால் மிரட்டுவோம், ஆட்சியாளர்களை மிரட்டுவோம், அதிகாரிகளை மிரட்டுவோம்

ஆதலால் எங்களை பற்றி நீங்கள் பேச கூடாது, உங்களை பற்றி நாங்கள் பேசமாட்டோம்

இப்படி ஒரு பொது புரிந்துணர்வில் அரசியல் மற்றும் சமூக கொள்ளையர்களின் கரங்களில் சிக்கி இருக்கின்றது ஊடகம்.

இதில் சாமன்யனின் குரல் ஒலிக்குமா? நிச்சயம் முடியாது

அனால் அதே விஞ்ஞானம் சாமான்யனுக்கு முகநூல் வழியாக வழிவிடுகின்றது இது எப்படி தவறாகும்?

முகநூல் ஆபத்து என்றால் அதுபோன்ற ஊடகங்கள் மகா ஆபத்து அல்லவா?

இக்காலத்தில் ஒரளவேனும் நியாமான கருத்துக்கள் மோதுமிடம் முகநூலே, சீமான் எனும் போலியினை ஒரு தேச துரோகியினை பாண்டே உயர்த்தி பிடித்தபொழுது ஒட அடித்தது முகநூலே

கலைஞரை, ஜெயாவினை கொஞ்சமும் பேசமுடியாமல் பாண்டே முழிக்கும்பொழுது அடித்து கலாய்ப்பது முகநூலே, தற்கால ஊடகங்களில் எம்மை பொருத்தவரை பணியினை செய்தது சவுக்கு எனும் தளமே. அதில் ஜாபர்சேட் எனும் சுயநலம் இருக்கலாம் ஆனால் அதில் பொதுநலம் மிக மிக அதிகமாக இருந்தது.

எத்தனை கருத்துக்களை மோதவிடுகிறது முகநூல், அதில் பாண்டே இன்னும் பல ஊடகவிற்பனர்கள் விமர்சிக்கபடுவர் அல்லது முகம் உரிக்கபடும். இதனை தாங்க தன்னை இன்னும் தயார் படுத்திகொள்ளவேண்டும், இப்படி சாட கூடாது.

அவர்கள் சொல்வது மட்டும் உண்மையாம், முகநூலில் வருவடு மட்டும் ஆதாரமில்லாததாம். சரி நீங்கள் யாரிடம் உருப்படியான கேள்வி கேட்டீர்கள்? ஒருவன் முகத்தை தோலுரிதீர்களா? ஒருவனை கேள்வியில் சிக்க வைத்தீர்களாஅ?

2 கேள்வி உருப்படியாக கேட்டால் அந்தமானுக்கு தப்பி இருப்பான் சீமான், செய்தீர்களா? உங்கள் முன் அருணனுக்கு சவால் விட்ட சீமான் தோற்றபின் என்ன கிழித்தீர்கள்? அது ஊடக உண்மை தன்மைக்கு ஆபத்து இல்லையா?

உண்மையில் பாண்டே சொல்லவந்தது முகநூல் கருத்துக்களால் தனக்கு ஆபத்து, தன்னை பொன்றவர்களுக்கு ஆபத்து என்பதே

பதற்றத்தில் மனிதர் கொஞ்சம் வார்த்தைகளை மாற்றிவிட்டார் அவ்வளவுதான்.

No comments:

Post a Comment