ரோபோ படம் வரும்பொழுது கலாபவன் மணியின் கேரக்டருக்கு பச்சைமுத்து என பெயர் வந்த பொழுதே பிரச்சினை தொடங்கியது
நண்பர் படத்தில் ஹீரோவின் பெயர் "பாரி" என வைத்து அதனை ஹீரொயினும் இன்னும் பலரும் கிண்டலாக அழைக்கும்பொழுதே சர்ச்சை வெடித்தது, ஹீரோயின் "பாரிவேந்தரவாது பூரிவேந்தராவது" என்பார், அதற்கே அழுதார்கள்.
இன்னும் சத்யன் "பாரி பூரி கக்கூஸ் லாரி" என சொல்லும்பொழுது அவர்கள் கண்கள் சிவந்தன, பஞ்சவன் பாரிவேந்தன் எனும் பெயர் அச்சினிமாவில் வந்தபொழுது அவர்கள் பொங்கி எழுந்தார்கள்
காரணம் இன்று சிக்கியிருக்கும் பச்சைமுத்துவின் உண்மை பெயர் பாரிவேந்தன்
பச்சைமுத்து பாரிவேந்தன்.
இது போதாதா, நாட்டை காத்து கூடவே தன்னையும் தன் சொத்துக்களையும் காக்க அவர் நடத்தும் கட்சியினர் பொங்கிவிட்டார்கள்
,நாங்கள் பாரி மன்னன் பரம்பரை, எங்கள் வம்சத்தின் குலக்கொழுந்து அல்லது ஆணிவேரான பச்சைமுத்துவினை சினிமாவில் கேவலபடுத்துகின்றார்களா.. என பல குரல்கள் எழும்பின, சிலர் வழக்கு வரை சென்றனர்.
சும்மா சிவனாகவோ, பாரியாகவொ இருந்தால் சினிமா சர்ச்சைகள் வராது, அன்றே சினிமா தொழில் தொடர்பாக பச்சைமுத்து இறங்கி இருக்கின்றார், ஏதோ புகைந்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை.
பின் பச்சைமுத்துவின் கரம் சினிமாவில் தன் அவமானத்தை துடைக்க நீண்டது, சில விஷயங்கள் நடந்தன.
அது பின்னாளில் வேந்தர் மூவிஸ் என லேபிள் மாட்டும்போது வெளிப்படையாக தெரிந்தது, அதுவரை சிக்கல் இல்லை
இவர் கட்டப்பா என நினைத்து பழகிய மதன், புலிப்பார்வை எனும் படம் எடுத்ததில் தொடங்கியது சறுக்கல், நாம் முன்பே சொன்னதுபோல பிரபாகரனுடன் படமெடுத்தவர்களே நாசமாய் போவார்கள் என்பது சென்டிமென்ட்.
நெடுமாறன் தனிமாறனாய் அலைவதும், வைகோ அரசியல் அனாதை ஆனதும், இதோ சைமன் சட்டையினை கிழித்து அலைவதே சாட்சிகள்.
அந்நிலையில் பிரபாகரன் வேடமேற்று நடித்தவன் என்ன பாடு படுவான், தஞ்சை கோயில் போலவே பிரபாரன் சென்டிமெண்டும் போட்டு தாக்கியது,
காசிக்கு சென்ற மதனை காணவில்லை. மருத்துவ கல்லூரிக்கு வசூலித்த பணத்தை எல்லாம் அவரிடம் கொடுத்தேன் என அவர் வாட்ஸ் அப்பில் அப்பிவிட்டு காணாமல் போனார், ஒருவேளை மாறுவேடத்தில் சாமியாராகி இருக்கலாம்
இனி பாலா ஏதும் அகோரி படமெடுக்கும்போது ரகசியமாக நடிக்காமல் உண்மை வராது
ஆக கல்வி,கட்சி,ஊடகம், போக்குவரத்து என எல்லா வியாபாரத்திலும் கொடிகட்டு பறந்த பச்சைமுத்து, சினிமாவில் கால்வைத்ததும் சிக்கி இருக்கின்றார்.
சினிமா அப்படித்தான், அந்த குதிரையில் எல்லோரும் சவாரி செய்ய முடியாது, மாய குதிரை அது. இதோ அதில் இறங்கிய நஷ்ட கணக்கில் கட்டப்பா மதன் முதுகுல் குத்தி, பச்சை முத்து பச்சை ஆடை கட்டியாகிவிட்டது.
இதனில் தென்னகத்தார் குறிப்பிடதக்கவர்கள் சட்டை போடதவன் எல்லாம் காந்தி என நம்ப சொன்ன முன்னாள் கல்விதந்தையும் ஒருவர்
தென்னகத்து அம்பானியும் மிகவும் குறிப்பிடதக்கவர், மண்ணோ பொன்னோ தனக்கு தெரிந்த தொழிலில் மட்டும் இருப்பாரே அன்றி மாய வேலைகளான சினிமாவில் எல்லாம் அன்னார் இறங்குவதே இல்லை
அண்ணாச்சின்னா சும்மாவா................
No comments:
Post a Comment