Monday, August 15, 2016

அணு அரசியலே மர்மமானது

கூடங்குள அணுவுலை காங்கிரஸ்காரரான ராஜிவ் தொடங்கியது என்றார்கள், காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் மறுசீரமைப்பு செய்தார் என்றார்கள்

பெரும் களபேரத்திற்கு அது அச்சாணி ஆயிற்று, காங்கிரஸ் ஆட்சி தமிழர் விரோதம் என்றார்கள் தோள் தட்டினார்கள்

இதோ மோடி திறந்துவைத்தார் ஒரு சத்தமுமில்லை, அட இன்னும் 5 வரும் என அதிரடியாக சொன்னாலும் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை

ஆக காங்கிரஸ் எதிர்ப்பு புள்ளிகளான வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோரும், இந்திய தேசிய எதிர்ப்பாளர்களும் சங்கமிக்கும் இடமாகத்தான அது திகழ்ந்திருக்கின்றது

இதனிடையே அடிக்கடி புகுஷிமாவினை பார் என்றவர்களும், கடும் எதிர்ப்புக்கிடையே ஜப்பான் இயக்க ஆரம்பித்துள்ள அணுவுலை பற்றி ஒன்றும் சொல்வார்கள் இல்லை. அங்கு அதனருகே நிறுத்திவைத்த ஒரு அணுவுலையினை மறுபடி ஜப்பான் இயக்க தொடங்கியாயிற்று

வேறு மின்சார தேவைக்கு என்ன வழி என கைபிசைந்து நிற்கிறது அந்நாட்டு அரசு

ஆக இந்தியாவில் காங்கிரஸ் எதனை செய்தாலும் எதிர்ப்போம், அதே வழியில் பிஜேபி சென்றால் சத்தம் காட்டமாட்டோம் என்றொரு புதிய அரசியல் கிளம்பியுள்ளது மட்டும் தெரிகின்றது

அணு அரசியலே மர்மமானது, அதில் இவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் அதனை விட மர்மமானது

No comments:

Post a Comment