Monday, August 22, 2016

பணமோ பணம்...

மதுரையில் பல கோடி ரூபாய் பணத்துடன் பழுதாகி நின்ற கண்டெய்னர் லாரி

அடிக்கடி லாரிகள் பணத்தோடு சிக்குகின்றன, பழுதான லாரியில் பணம், கண்டேய்னரில் பணம், ரயில் பெட்டியில் பணம், பணமோ பணம் பணக்கார தேசமாக மாறிவிட்டது தமிழகம், காந்தியும், நேருவும் ஆசைபட்ட இந்தியா இதுதான்.

இனி எதற்கு வெளிநாடு?

உடனே ஊருக்கு சென்று கண்டெய்னர் கிளீனராக பணிக்கு சேரவேண்டும், தினமும் சுத்தம் செய்யும் பொழுதாவது ஆங்காங்கு உள்ளே சிதறி கிடக்கும் 5 ஆயிரமோ ஐம்பதாயிரமாவது பொறுக்க முடியாதா?, அதனை வைத்து எப்படியாவது வாழ்ந்துவிடலாம்

எந்த லாரியில் எத்தனை கோடியோ? லாரி கணடெய்னரே இப்படி என்றால்? சரக்கு கப்பல் எப்படி இருக்கும்?

எதற்கும் துறைமுகம் கிளீனர் வேலைக்கும் முயற்சி செய்யலாம், எப்படிபட்ட பொற்கால ஆட்சி, காணுமிடமெல்லாம் பணம்

அரபு நாடோ, அமெரிக்காவோ இதன் அருகில் வரமுடியுமா? ஏ தமிழகமே நீ பொருளாதார வல்லசராக மாறிகொண்டிருக்கின்றாய். இனி அக்காலத்தில் கோழிவிரட்ட தங்க கம்மல் எறிந்த கதைதான்

காக்காய் விரட்ட 5 ஆயிரம் ரூபாய் கட்டு, நாயினை அடிக்க 50 ஆயிரம் ரூபாய் கட்டு.

வாழ்க தமிழகம், ஓடட்டும் கண்டெய்னர்கள்.

No comments:

Post a Comment