சசிகலா புஷ்பாவை அடிச்சதுக்கு ஜெயலலிதா
பதில் சொல்ல வேண்டும் : ஸ்டாலின் பேச்சு
சொந்த கட்சிக்காரனை அவர் சாத்தும்பொழுது வராத அக்கறை, ஜெயா அடித்தவுடன் வருகிறதல்லவா இது அரசியல்
எனினும் அக்காலத்தில் திமுகவினரால் தாக்கபட்ட இந்திரா காந்தி முதல், புலிகளை வளர்த்துவிட்டு சோனியாவின் விதவை கோலம் வரை எதற்காவது இங்கு பதில் சொன்னதுண்டா?
மதுரை லீலாவதி எனும் பெண் படுகொலை, தா.கிருட்டினனின் மனைவியின் கண்ணீர் என பாதிக்கபட்ட பெண்களுக்கெல்லாம் என்ன பதில் சொன்னார்கள்?
கொஞ்சநாளைக்கு முன்பு குஷ்பூ திமுகவில் இருக்கும்பொழுது அவர் வீட்டில் கல்வீசி விளையாடினார்கள் அல்லவா, குஷ்பூ கூட அழுதார் அப்பொழுது யார் பதில் சொன்னார்கள்?
அது உங்கள் கட்சி விவகாரம் என்றால், இது அவர்கள் கட்சி விவகாரம் அல்லவா?
குஷ்பூவிற்கு ஒரு நியாயம், சசிகலா புஷ்பாவிற்கு ஒரு நியாயமா?
No comments:
Post a Comment