Sunday, August 28, 2016

வைகுண்டராஜனுக்கு எதிராக சகோதரர் பரபரப்பு பேட்டி

வைகுண்டராஜனுக்கு எதிராக சகோதரர் பரபரப்பு பேட்டி


வரலாற்றில் இருந்து பல பாடங்களை படிக்க முடியும், ஒருவனை வீழ்த்தவேண்டுமானால் அவன் உறவுகள் மூலம் அவனை அடிக்கவேண்டும், காரணம் அந்த உறவுகள் கொடுக்கும் மனரீதியான வலி அவனை தடுமாற செய்யும், குழம்பும் மனம் வலிமை இழக்கும், அவனை வீழ்த்துவது எளிது.


இன்று இஸ்ரேலிய மொசாத் செய்யும் பெரும் நுட்பமான வித்தை அது, பலமானவர்கள் குடும்பத்தில் குழப்பம் செய்து அவர்கள் சாதிக்கும் காரியங்கள் உண்டு.




இந்த ஞானத்தை அப்படியே பின்பற்றிவன் மாவீரன் அலெக்ஸாண்டர், உறவுகள் யாரையும் அவன் அண்டவிட்டத்தில்லை, எந்த உறவினையும் அவன் நம்பவில்லை


காரணம் அரசியல் அப்படியானது, நம்பினோர் செய்யும் துரோகம் மனதால் வலிக்கும், மனம் போனால் உடல் வீழும்


அதனால்தான் தான் சாகும்போதும் தன் அரசை 4 நண்பர்களுக்கு பகிர்ந்தளித்தானே அன்றி, தன் குடும்பத்திற்கு அல்ல, அவன் காட்டிய அந்த அரசியல் ஞானம் ஆச்சரியமானது.


தம்பியினை வைத்து அண்ணனை விழ்த்துவது, மகனை வைத்து தந்தையினை வீழ்த்துவது என வரலாறு எங்கும் இப்படியான துரோகங்கள் கொட்டி கிடக்கின்றன.


பதவி ஆசையோ இல்லை வேறு ஆசைகளோ அதற்கு துணைபோகின்றன, உலகெல்லாம் வென்று வந்த ராவணனை வரவேற்ற தம்பிதான், ராவணனை விட சிறந்த வீரன் வரும்பொழுது அவன்பின் சென்றான்


முடிவில் அண்ணனை அழித்து ஆட்சியும் பெற்றான்.


ராவணன் காலம் முதல் சட்டமன்றத்தில் கண்ட மறைந்த முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனி வரை வரலாறு பலரை காட்டுகின்றது.


இன்று வைகுண்டராஜனுக்கும் அதே போன்றதொரு அடி விழதொடங்கி இருக்கின்றது, அன்னார் எப்படி எதிர்கொண்டு வருகின்றார் என்பது காலத்தின் கையில்


ஒருவிஷயம் புரிகின்றது, யாரெல்லாம் சர்ச்சைகள் வரும் தொழில்களை செய்யும் மீடியா அதிபர்களோ அவர்களை குறிவைத்து கனைகள் வீசபடுகின்றன,


மீடியா இல்லா கொள்ளையர்கள் பி.ஆர் பழனியப்பன், ஆறுமுகச்சாமி போன்றோர் மீதெல்லாம் இப்பொழுது சர்ச்சையே இல்லை,


சகாயம் அறிக்கை என்ன ஆனது தெரியவில்லை, ஆறுமுகச்சாமி இருக்காரா இல்லையா தெரியவில்லை, ஆனால் அவரது மணல் லாரிகள் ஓடிகொண்டே இருக்கின்றன‌


புதிதாக ஒரு கட்சி வளரத்தான் அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள், இப்பொழுதெல்லாம் புதிதாக டிவிசேனல் வந்தாலும் விரும்புவதில்லை.


பொதுவாக அரசியல்வாதிகள் சில வட்டங்களை போட்டு சிலரை வளரவிடுகின்றனர், அந்த வட்டத்தினை விட்டு அவர்கள் வெளிவர நினைக்கும்பொழுது அவர்களை உண்டு இல்லை என ஆக்கிவிடுகின்றனர்.


ஆனால் அப்படி ஆண்டவனும் ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம் போட்டிருக்கின்றான், எல்லா மனிதனுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உச்சகட்ட எல்லை என ஒன்று உண்டு, அதனை தாண்டினால் என்றும் சிக்கல்தான்


அவரவர் எல்லைக்குள் அவரவர்கள் நின்றால் ஒரு சிக்கலுமில்லை என்பதுதான் வாழ்க்கை தத்துவம்.


எப்படியோ கேப்டன் விஜயகாந்த் தெம்பாகும் நேரம் இது, அவர்தான் வைகுண்டராஜனை நேரடியாக கண்டித்த முதல் மற்றும் ஒரே அரசியல்வாதி, இன்றுவரை அவரே தான்


ஆனால் இன்னும் ஒன்றும் இதனைபற்றி சொல்லவில்லை, சொன்னால் இதுதான் சாக்கு என யாரும் சர்ச்சை ஆக்குவார்கள் என யோசிக்கின்றாரோ என்னமோ?



No comments:

Post a Comment