Tuesday, August 30, 2016

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்...




தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் : செய்தி


இது என்ன அதிரடி மாற்றம்?, வழக்கமான செய்தி, ஏதும் அந்த கட்சிக்காரர்களிடம் கேளுங்கள், ஆளுநர் சும்மா இருந்தால் எப்படி?, அவருக்கு வேலை கொடுக்கவேண்டாமா என்பார் ஒருவர்


இன்னொருவர் "ஆளுநருக்கே வேலை கொடுத்து ஆளபிறந்த நாயகி..." என தொடங்கிவிடுவார்கள்.





சரி முடிவெடுப்பது முதல்வர் , அமர்த்துவதும் அடித்து விரட்டுவதும் முதல்வர், இதில் ஆளுநர் எதற்கு? எல்லாம் வீண் சம்பிரதாயம்.

என்றாவது ஆளுநர் இவரை ஏன் மாற்றுகின்றீர்கள்? என்ன குற்றம் கண்டீர்கள்? தவறான ஆளை ஏன் பரிந்துரைத்தீர்கள் என கேட்டாரா? இனி கேட்பாரா? அல்லது கேட்கத்தான் முடியுமா?

ஒரு ரப்பர் ஸ்டாம்பு செய்யும் வேலை இது, சட்டத்தில் இடமிருந்தால் இதனை சபாநாயகர் தனபாலே செய்துவிடுவார்.

சட்டமன்ற கூட்டதொடரில் ஆளுநர் உரை வாசிக்கின்றார், எதற்கு சம்பிரதாயத்திற்கு ஒரு உரை. இதனை பன்னீர் செல்வமே வாசிக்கலாம். "யார் தருவார் இந்த அரியாசனம்...." என ஒரு பாடலாவது வரும்.

தமிழக பல்கலைகழகங்களுக்கு எல்லாம் ஆளுநர்தான் வேந்தர். எந்த பல்கலைகழக ஊழலை, கொள்ளையினை கண்டித்திருக்கின்றாரா? பல்கலை கழக தரம், கல்லூரி செயல்பாடு, கல்விதரம் பற்றி ஒரு அறிக்கை படிக்கின்றாரா? ஒன்றுமே இல்லை

பட்டம் வழங்கும் விழா என்றால் மட்டும் வருவார், ஏன் அவ்வளவு கொட்டிபடிக்கும் மாணவர்கள் பட்டம் வாங்கமலா ஓடிவிடுவார்கள். அந்த வேந்தர் பதவியால் தமிழ பல்கலைகழகங்களுக்கு அவர் செய்ததென்ன?

எத்தனை பல்கலைகழகங்கள் சிக்கலில் மாட்டும், அன்னார் வேந்தராக என்ன செய்தார்?

தமிழக பிரச்சினைகள் பற்றி என்றாவது அவர் பேசியிருகின்றாரா? ஏதும் ஒரு வார்த்தை அல்லது மத்திய அரசுக்கு அறிக்கை? ம்ஹூம்.

பின்னர் ஏன் ஒரு பதவி?, அவருக்கொரு மாளிகை?, அவருக்கொரு பெரும் செலவு?, ஓய்வுபெற்ற அரசியல்வாதிகள் சொகுசுவாழ்க்கை வாழும் பதவியா அது? அதற்கொரு முதியோர் இல்லம் போதாதா?

அண்ணா அன்றே சொன்னார், "ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையா தம்பி?"







No comments:

Post a Comment