Wednesday, August 31, 2016

புரியாத புதிர் இந்த தமிழ் திரையுலகம்...

அவளுக்கு தெரியாமல் திருட்டு தனமாக இணையம் வருவதுதான் திரில், என்னுடைய பாகம்பிரியாள் அவசர விடுப்பில் சென்றிருப்பதால் கண்டிக்க யாருமில்லை. அருணாசலம் படத்தில் ரஜினிக்கு சுருட்டு வெறுத்தது போல இணையம் சுற்றி சுற்றி வெறுத்துவிட்டது.


80ம் கால படங்களுக்குள் மூழ்கினேன், ஆரம்ப காலத்தில் கமலும் ரஜினியும் எப்படி எல்லாம் இமேஜ் பார்க்காமல் நடித்திருக்கின்றார்கள். துக்கடா வேடம், ஏமாளி வேடம், பெண் பித்தன் வேடம், வில்லன் வேடம், கோமாளி வேடம் என கிடைத்த இடத்தில் எல்லாம் தங்களை நிருபித்திருக்கின்றார்கள்.




காலம் மாற மாற இருவருமே மாறி இருக்கின்றார்கள், கமலஹாசன் பரிசோதனை முயற்சி, தொழில்நுட்ப முயற்சி இன்னும் பல முயற்சி என மாறிவிட்டார், தன் உயிரை தவிர எல்லாவற்றிலும் நடிப்பு முயற்சி செய்தாகிவிட்டது, இனி நடிக்க என்ன இருக்கிறது எனும் நிலைக்கு வந்தாயிற்று.


ரஜினி தனக்கென ஒரு பிரத்யோக வட்டத்தில் சிக்கிகொண்டார், முள்ளும் மலரில் மட்டும் வித்தியாசம் காணமுடிந்தது, அதன் பின் மனிதரின் வட்டம் விட்டு அவர் வரவே இல்லை, வரவும் மாட்டார்.


அன்று இளம் கன்றுகள் கிடைத்த வாய்ப்பில் அசத்தியிருக்கின்றார்கள், இன்று வளர்ந்துவிட்டவர்கள் தனி தனி ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.


வளரும் காலத்தில் தடுக்காத இமேஜ், வளர்த்துவிட்ட காலத்தில் இணைய தடுக்கிறது.


இந்த இமேஜ் எனும் மாயபிம்பம்தான் எத்தனை நல்ல விஷயங்களை தடுத்துகொண்டே இருக்கின்றது, மற்ற மொழிகளில் இல்லா சாபம் தமிழக சினிமாவிற்கு மட்டும் நீங்கா சாபமாக தொடர்ந்து வருகின்றது, இப்போதைக்கு ஒழிவது போல தெரியவில்லை.


அன்று எத்தனை படங்களில் இணைந்திருக்கின்றனர், இப்பொழுது இணைந்தால் என்ன? 10 படம் நடித்தால்தான் என்ன? வானம் இடிந்து விழுமா?


முன்பின் தெரியாத புதுமுக நடிகைகளுடன் எல்லாம் நடிப்பவர்களுக்கு, திடீர் டைரக்டர்கள் கையில் விழுந்து நடிப்பவர்களுக்கு.


பலவருடம் பழகிய நண்பர்களாக‌ இணைந்து நடிக்க முடியவில்லை.


என்ன திரையுலகமோ என்ன வட்டமோ,


அவளுக்கு தெரியாமல் திருட்டு தனமாக இணையம் வருவதுதான் திரில், என்னுடைய பாகம்பிரியாள் அவசர விடுப்பில் சென்றிருப்பதால் கண்டிக்க யாருமில்லை. அருணாசலம் படத்தில் ரஜினிக்கு சுருட்டு வெறுத்தது போல இணையம் சுற்றி சுற்றி வெறுத்துவிட்டது.

80ம் கால படங்களுக்குள் மூழ்கினேன், ஆரம்ப காலத்தில் கமலும் ரஜினியும் எப்படி எல்லாம் இமேஜ் பார்க்காமல் நடித்திருக்கின்றார்கள். துக்கடா வேடம், ஏமாளி வேடம், பெண் பித்தன் வேடம், வில்லன் வேடம், கோமாளி வேடம் என கிடைத்த இடத்தில் எல்லாம் தங்களை நிருபித்திருக்கின்றார்கள்.


காலம் மாற மாற இருவருமே மாறி இருக்கின்றார்கள், கமலஹாசன் பரிசோதனை முயற்சி, தொழில்நுட்ப முயற்சி இன்னும் பல முயற்சி என மாறிவிட்டார், தன் உயிரை தவிர எல்லாவற்றிலும் நடிப்பு முயற்சி செய்தாகிவிட்டது, இனி நடிக்க என்ன இருக்கிறது எனும் நிலைக்கு வந்தாயிற்று.

ரஜினி தனக்கென ஒரு பிரத்யோக வட்டத்தில் சிக்கிகொண்டார், முள்ளும் மலரில் மட்டும் வித்தியாசம் காணமுடிந்தது, அதன் பின் மனிதரின் வட்டம் விட்டு அவர் வரவே இல்லை, வரவும் மாட்டார்.

அன்று இளம் கன்றுகள் கிடைத்த வாய்ப்பில் அசத்தியிருக்கின்றார்கள், இன்று வளர்ந்துவிட்டவர்கள் தனி தனி ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.

வளரும் காலத்தில் தடுக்காத இமேஜ், வளர்த்துவிட்ட காலத்தில் இணைய தடுக்கிறது.

இந்த இமேஜ் எனும் மாயபிம்பம்தான் எத்தனை நல்ல விஷயங்களை தடுத்துகொண்டே இருக்கின்றது, மற்ற மொழிகளில் இல்லா சாபம் தமிழக சினிமாவிற்கு மட்டும் நீங்கா சாபமாக தொடர்ந்து வருகின்றது, இப்போதைக்கு ஒழிவது போல தெரியவில்லை.

அன்று எத்தனை படங்களில் இணைந்திருக்கின்றனர், இப்பொழுது இணைந்தால் என்ன? 10 படம் நடித்தால்தான் என்ன? வானம் இடிந்து விழுமா?

முன்பின் தெரியாத புதுமுக நடிகைகளுடன் எல்லாம் நடிப்பவர்களுக்கு, திடீர் டைரக்டர்கள் கையில் விழுந்து நடிப்பவர்களுக்கு.

பலவருடம் பழகிய நண்பர்களாக‌ இணைந்து நடிக்க முடியவில்லை.

என்ன திரையுலகமோ என்ன வட்டமோ, புரியாத புதிர் இந்த தமிழ் திரையுலகம்.


No comments:

Post a Comment