Monday, August 15, 2016

தீபா கர்மாகர்

"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது"

உனக்காகவே எழுதபட்டது சகோதரி தீபா கமர்க்கர்,

FB_IMG_1471254033120

பதக்கம் கிடக்கின்றது, யாருக்கு வேண்டும்? அது இன்று இல்லையேல் நாளை.

இந்திய பெண்களும் ஜிம்னாஸ்டிக்கில் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டிவிட்ட அந்த ஒற்றை சாதனை போதும், இனி கிளம்பும் இந்திய பெண்களுக்கு நீதான் ஜிம்னாஸ்டிக் தாய்

https://youtu.be/H3a_ddOUvRo

பதக்கம் தவறினாலும் கொஞ்சமும் தயங்காமல் அடுத்த ஜப்பான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என சொல்லும்போது

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து" என்றே பாராட்ட தோன்றுகின்றது

வடகிழக்கு மாநில அரசியலில் சில சர்ச்சைகள் இருக்கலாம், ஆனால் அதனின்று உதித்து இந்திய அடையாளமாக பிரேசிலில் மின்னிய எமது தேச மகளுக்கு

சுதந்திர தின வாழ்த்துக்களோடு மிக சிறப்பான வாழ்த்துக்கள்.

உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது இந்த தேசம்

(எவனாவது வந்து வடகிழக்கு மாநில சர்ச்சைகளை, போராட்டத்தை ஒழிக்க மோடி பார்ப்பண அரசால் திட்டமிட்டு உருவாக்கபட்டவர் தீபா என ஒப்பாரி வைத்தால் அவன் எங்கிருந்தாலும் தேடி வந்து ............... )

No comments:

Post a Comment